திருச்சிராப்பள்ளி, நவ,21- தொழிலாளர் நல அலுவலகத்தில் காலி யாக உள்ள பதவியிடங்களை பூர்த்தி செய்ய வேண்டும். தொழிலாளர் வழக்குகளுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும். இ.எஸ்.ஜ மருத்துவமனையில் உள்ள ஊழியர் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். நல வாரிய அலுவலகத்திற்குள்ளே தேசிய, மாநில அளவில் அங்கீகரிக்கப்பட்ட தொழிற் சங்கத்தினரை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு திருச்சி மாநகர் மாவட்ட குழு சார்பில் வியாழ னன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு சிஐடியு மாநகர் மாவட்டச் செயலாளர் ரெங்கராஜன் தலை மை தாங்கினார். கோரிக்கைகளை விளக்கி சிஐடியு நிர்வாகிகள் சந்திரன், மணிமாறன், இளையராஜா, கருணாநிதி, சந்திரசேகரன், ராஜ் ஆகியோர் பேசினர். இதில் ஏராள மானோர் கலந்து கொண்டனர்.