districts

img

மாதந்தோறும் 5 ஆம் தேதிக்குள் சம்பளம் வழங்க கோரி சிஐடியு தர்ணா

புதுக்கோட்டை, மே16-  

    புதுக்கோட்டை நகராட்சியில் பணி புரியும் தூய்மைப் பணியாளர்களுக்கு மாதந்தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்ப ளம் வழங்க வேண்டும் என்பன உள் ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐ டியு தொழிற்சங்கம் சார்பில் செவ்வாய்க் கிழமை தர்ணா நடைபெற்றது.

   புதுக்கோட்டை நகராட்சியில் 160  நிரந்தரப் பணியாளர்கள்,  229 ஒப்பந்தப் பணியாளர்கள் என மொத்தம் 389  தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கு மாதம்  ரூ.26 ஆயிரம் சம்பளம் வழங்க வேண்டும்.  மாதம் தோறும் 5-ஆம் தேதிக்குள் சம்ப ளம் வழங்க வேண்டும். ஒப்பந்தத் தொழி லாளர்களை மரியாதையுடன் நடத்த வேண்டும். சம்பளத்துடன் கூடிய வார விடுப்பு வழங்க வேண்டும். எல்ஐசி பாலிசிக்காக பிடிக்கப்படும் பணத்தை முறையாகக் கட்ட வேண்டும். ஊதிய  ஒப்பந்தப் பேச்சுவார்தையில்  தொழிற் சங்கப் பிரதிநிதிகளையும் அழைத்துப் பேச வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தர்ணா நடைபெற் றது.

  புதுக்கோட்டை மாவட்ட உள்ளாட்சித் துறை தொழிலாளர் சங்கம் (சிஐடியு)  சார்பில் புதுக்கோட்டை பேருந்து நிலை யத்தில் நடைபெற்ற போராட்டத்திற்கு மாவட்டப் பொதுச் செயலாளர் கே.முக மதலி ஜின்னா தலைமை வகித்தார். கோரிக்கைகளை வலியுறுத்தி சிஐடியு மாநிலச் செயலாளர் ஏ.ஸ்ரீதர், துணைத் தலைவர் முத்தையா, துணைச் செய லாளர் கே.ரெத்தினவேல், கட்டுமானத்  தொழிலாளர் சங்க மாவட்டத் துணைத் தலைவர் சாந்தார் உள்ளிட்டோர் பேசி னர். போராட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட  தொழிலாளர்கள் பங்கேற்றனர்.