திருவாரூர், ஜன.29 - ‘நீடித்த பாதுகாப்பான நீர் மேலாண்மை’ என்ற தலைப்பில் அம்மையப்பன் குளோபல் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத் தின் மாவட்ட ஒருங்கிணைப்பு குழு சார்பாக குழந்தை கள் அறிவியல் மாவட்ட மாநாடு நடைபெற்றது. விழாவின் துவக்க நிகழ்விற்கு அறிவியல் இயக்க மாவட்டத் தலைவர் பி.சங்கரலிங்கம் தலைமை வகித்தார். மாநிலச் செயலாளர் எம்.எஸ்.ஸ்டீபன் நாதன் மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ் மாநாட்டில் கலந்து கொண்ட குழந்தைகளை வாழ்த்திப் பேசினார். தொடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள் மற்றும் வட்டார வளமைய மேற்பார்வையாளர்கள் வாழ்த்துரை வழங்கினர். அறிவியல் இயக்க மாவட்டச் செயலாளர் காந்திராஜன் வரவேற்றார். மாவட்டப் பொருளாளர் க.அன்பழகன் நன்றி கூறினார். மாநாட்டில், மாவட்டத்தில் உள்ள நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை மற்றும் மெட்ரிக், மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிகளில் இருந்து மொத்தம் 266 ஆய்வுகள் சமர்ப்பிக்கப்பட்டன. நிகழ்வில் இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனத்திலிருந்து (திருவனந்த புரம்) விஞ்ஞானி சசிகுமார் கலந்துகொண்டு மாண வர்களுடன் கலந்துரையாடி, மாணவர்களின் கேள்வி களுக்கு பதில் அளித்தார். மாவட்ட மாநாட்டில் வெற்றி பெற்று மண்டல மாநாட்டிற்கு செல்லக்கூடிய ஆய்வுகளை பாராட்டி பரிசுகளை திருவாரூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் இரா.சௌந்திரராஜன் வழங்கினார். நிகழ்வில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் ஆசிரி யர்கள், அறிவியல் இயக்க பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.