புதுக்கோட்டை, நவ.14 - குழந்தைகளை புத்தகங்கள் இல்லாமல் வரவழைத்து குழந்தைகள் தினம் கொண்டாடி யது புதுக்கோட்டை திருக்கோ கர்ணம் ஸ்ரீவெங்கடேஸ்வரா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி. பள்ளி வளாகத்தில் நடை பெற்ற குழந்தைகள் தின விழா விற்கு பள்ளி முதல்வர் கவிஞர் தங்கம்மூர்த்தி தலைமை வகித் தார். பள்ளிக்கு வந்த மாண வர்களை ஆசிரியர்களுடன் இணைந்து பூங்கொத்து கொடுத் தும், இனிப்புகள் வழங்கியும் வரவேற்றார். வண்ண உடை களுடன் வந்த மாணவர்கள் பாடல், நாடகம், நடனம், நகைச் சுவை நிகழ்ச்சிகள், கதைகள் மற்றும் விளையாட்டுகள் என மகிழ்ச்சியுடன் குழந்தைகள் தினத்தைக் கொண்டாடினர். துணை முதல்வர் குமார வேல், ஒருங்கிணைப்பாளர்கள் கெளரி, அபிராமசுந்தரி, வர லட்சுமி, கோபமதிப்பிள்ளை, உதயகுமார், காசாவயல் கண்ணன், கணியன் செல்வராஜ் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.