திருச்சிராப்பள்ளி, செப்.3 - பள்ளி மாணவ, மாணவி யர்களின் அறிவியல், கணி தம் சார்ந்த ஒலிம்பியாட் தேர்வுகளுக்கு பெரும ளவில் தயாராகி பங்கு பெறு வதைப் போன்று தமிழ் மொழி இலக்கிய திறனை மாணவர்கள் மேம்படுத்திக் கொள்ளும் வகையில் 2022-2023 ஆம் கல்வியாண்டு முதல் தமிழ் மொழி இலக்கியத் திறனறித் தேர்வு நடத்தப்படவுள்ளது. இத்தேர்வில் 1500 மாண வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை வழியாக மாதம் ரூ.1500 வீதம் 2 வருடங் களுக்கு வழங்கப்படும். இத்தேர்வில் 50 விழுக்காடு அரசுப் பள்ளி மாணவர் களும், மீதமுள்ள 50 விழுக் காட்டிற்கு அரசுப் பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட பிற தனியார் பள்ளி மாண வர்களும் தேர்வு செய்யப்படு வர். தமிழ்நாடு அரசின் 10 ஆம் வகுப்பு தர நிலையில் உள்ள தமிழ் பாடத்திட்டங் களின் அடிப்படையில் கொள்குறி வகையில் தேர்வு நடத்தப்படும். அனைத்து மாவட்டங்களிலும் மாவட்டத் தலைநகரங்களில் இத்தேர்வு நடத்தப்படும். 2022-2023 ஆம் கல்வி யாண்டில் தமிழகத்தில் உள்ள அங்கீகாரம் பெற்ற அனைத்து வகை பள்ளிக ளிலும் பயிலும் (CBSE/ICSE/உட்பட) 11 ஆம் வகுப்பு மாணவர்கள், 1.10.2022 (சனிக்கிழமை) அன்று நடை பெறவுள்ள இத்தேர்விற்கு விண்ணப்பிக்கலாம்.
இத்தேர்விற்கு மாணவர்கள் தாங்கள் பயிலும் பள்ளியின் வாயிலாக மட்டுமே விண்ணப் பிக்க இயலும். எனவே மாணவர்கள் இத்தேர்விற்கான விண்ணப் பங்களை www.dge.tn. gov.in என்ற இணையதளம் மூலம் செப்டம்பர் 9 ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தேர்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சேர்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரி டம் ஒப்படைக்குமாறு அறி வுறுத்தப்படுகிறது. பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங் களை சமர்ப்பிக்க வேண்டி கடைசி நாள் 9.9.2022 என திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் தெரிவித்து உள்ளார். தஞ்சாவூர் தேர்வு தொடர்பான அறி விப்பை மாணவர்கள் அறி யும் வண்ணம் அனைத்து பள்ளிகளிலும் அறிவிப்பு பலகையில் ஒட்ட வேண்டும். அதிக எண்ணிக்கையிலான தேர்வர்கள் விண்ணப்பிக்க தலைமை ஆசிரியர்கள், பள்ளி முதல்வர்கள் ஊக்கப் படுத்த வேண்டும் என தஞ்சை மாவட்ட முதன் மைக் கல்வி அலுவலர் சிவ குமார் தெரிவித்துள்ளார்.