districts

img

காற்று மாசுபாடு குறித்த மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி

காற்று மாசுபாடு குறித்த மாணவ, மாணவியரின் விழிப்புணர்வு பேரணி செவ்வாயன்று திருச்சி தேசியக் கல்லூரி மேல்நிலைப் பள்ளியில் இருந்து  நடைபெற்றது. பேரணியை மாநகராட்சி நிர்வாகப் பொறியாளர் குமரேசன் தொடங்கி வைத்தார். பேரணியில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசீலன், தேசிய கல்லூரி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பாலசுப்பிரமணியன், பசுமை படை ஒருங்கிணைப்பாளர் சகாயராஜ் உள்ளிட்டோர் விழிப்புணர்வு பதாகைகளுடன் கலந்து கொண்டனர்.