திருச்சி, ஆக. 21- தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மற்றும் அரசு விரைவு போக்கு வரத்து கழக ஓய்வூதியர்கள் சங்க சிறப்பு பேரவை கூட்டம் புதனன்று திருச்சியில் நடந்தது. கூட்டத்திற்கு ஓய்வு பெற்றோர் நல அமைப்பு தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். சிஐடியு மாநகர் மாவட்டச் செயலா ளர் ரெங்கராஜன் துவக்க உரையாற்றினார். அரசு விரைவு போக்குவரத்து கழக ஓய்வு பெற்றோர் சங்க பொருளாளர் ராமதாஸ், தமிழ்நாடு அரசு போக்கு வரத்துக் கழக ஓய்வு பெற்றோர் நல அமைப்பு மாநில துணைத்தலைவர் சண்முகம், மாநில துணை செயலா ளர் சின்னசாமி ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் போக்குவரத்து ஓய்வு பெற்ற தொழிலா ளர்களுக்கு 15 மாதங்களாக வழங்காமல் உள்ள டி.ஏ வை உடனே வழங்க வேண்டும். நீதிமன்ற தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 27 ஆம் தேதி திருச்சியில் நடைபெற உள்ள சாலை மறியல் போராட்டத்தை வெற்றிபெற செய்வது என முடிவெ டுக்கப்பட்டது. முடிவில் நிர்வாக குழு உறுப்பினர் பாஸ்கர் நன்றி கூறினார்.