தஞ்சாவூர், ஜூலை 15- தமிழ்நாடு அரசு அனைத்துத் துறை ஓய்வூதியர் சங்கத்தின் பட்டுக்கோட்டை வட்டக்கிளை சார்பில், 8 ஆவது வட்டப் பேரவை நடைபெற்றது.
மாவட்ட இணைச் செயலாளர் சி.பிச்சைமுத்து கொடியேற்றி வைத்து உரை யாற்றினார். துணைத் தலைவர் த.சந்திரமோ கன் வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மேனாள் மகளிர் குழு அமைப்பா ளர் ச.செல்வி பேரவையைத் துவக்கி வைத்து பேசினார்.
இக்கூட்டத்தில், அரியலூர் - தஞ்சாவூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதை, மன்னார் குடி- மதுக்கூர் - பட்டுக்கோட்டை புதிய ரயில் பாதைகளுக்கு, ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் போதிய அளவு நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை தொடங்க வேண்டும். பட்டுக்கோட்டை வட்டம் பொன்னவராயன் கோட்டை, உக்கடை தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சமூக நலக்கூடம் கட்டித் தர வேண்டும். பொன்னவ ராயன் கோட்டை, உக்கடை பகுதியில் மூத்த குடிமக்கள் செய்தி பத்திரிகை வாசிக்கவும், ஓய்வு நேரத்தில் கலந்துரையாடவும் மூத்த குடிமக்கள் மனமகிழ் மன்றத்தை அமைக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.ராஜ கோபாலன் நிறைவுரையாற்றினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கோ.ஆனந்தராவ் நன்றி கூறினார்.