பேராவூரணி, மே 15-
பேராவூரணியில் தனியாருக்கு இணை யாகச் செயல்பட்டு வரும் வட்டார அரசு ஆரம்ப சுகாதார நிலைய மேம்பாட்டுப் பணிக்கு நன்கொடை வழங்கியவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது.
செருவாவிடுதியில் அமைந்துள்ள வட்டார ஆரம்ப சுகாதார நிலையம் ஐஎஸ்ஓ தரச் சான்றிதழ் பெற்றது. இந்த ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வெளி நோயாளிகள் பிரி வுக்கு செல்லும் நடைபாதையில் பேவர் பிளாக் பதிக்க நிதி வழங்கிய நாடங்காடு சசிக்குமார் மற்றும் பல்வேறு மேம்பாட்டிற்கு நன்கொடை வழங்கிய ஆவணம் ஜெக நாதன் ஆகியோருக்கு மருத்துவமனை வளா கத்தில் பாராட்டு விழா நடைபெற்றது.
விழாவிற்கு வட்டார மருத்துவ அலுவலர் வி.சௌந்தரராஜன் தலைமை வகித்தார். மருத்துவர் சதீஷ்குமார், பல் மருத்துவர் தேன்மொழி ஆகியோர் முன்னிலை வகித்த னர். நன்கொடையாளர்களை பாராட்டி, பய னாடை அணிவித்து கேடயம் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில், வட்டார சுகாதார மேற்பார் வையாளர் சந்திரசேகரன், கண் மருத்துவ நுட்பநர் திரவியம், கண்காணிப்பாளர் நந்த குமார், உதவியாளர் வசந்தராணி, மருந்தாளு நர் சரவணன், செவிலியர்கள் மற்றும் மருத்து வப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.