திருச்சிராப்பள்ளி, ஜூன் 10-
திருச்சி மாநகராட்சி மற்றும் நகராட்சி மற்றும் ஓய்வூதியர் சங்கத்தின் பொதுக்குழு, வெள்ளிவிழா மற்றும் நிர்வாகிகள் தேர்தல் கூட்டம் ஆகிய முப்பெரும் விழா திருச்சியில் சனிக்கிழமை அன்று நடைபெற்றது.
கூட்டத்திற்கு சங்க தலைவர் சந்திரசேக ரன் தலைமை வகித்தார். துணைத்தலை வர் விஸ்வலிங்கம் வரவேற்றார். நிதிநிலை அறிக்கையை பொருளாளர் திருஞான சம்பந்தம் சமர்ப்பித்தார். மாநகராட்சி மேயர் அன்பழகன், மாநில பொதுச்செயலாளர் ராஜமுக்தி, மாநில தலைமை நிலைய செய லாளர் ஜானகிராமன் ஆகியோர் சிறப்புரை யாற்றினர். துணைச்செயலாளர் சேகர் நன்றி கூறினார்.
தொகுப்பு தொகைக்கான தவணை தொகை பிடித்தம் 15 ஆண்டுகளுக்கு பதிலாக கேரள மாநிலத்தில் 12 ஆண்டுகளாக பிடித்தம் செய்வது போல் தமிழகத்திலும் 12 ஆண்டு களாக குறைக்க வேண்டும். திருச்சி மாநக ராட்சியில் ஓய்வூதியர்களின் விபரங்களை ஆன்லைன் மூலம் தெரிந்து கொள்ளவும், வருடாந்திர வாழ்வு சான்றினை கைரேகை மூலம் ஆன்லைன் அனுப்ப ஏதுவாக கணினி மயமாக்க வேண்டும். ஓய்வூதியரின் மறை வுக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதி யினை ரூ.1 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன.