தஞ்சாவூர், மே 6-
தமிழ்நாட்டில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில், 2023-24 ஆம் ஆண்டுக்கான மாணவர்கள் சேர்க்கை தொடங்கவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் மட்டுமே பதிவு செய்ய வேண்டும். மே 8 ஆம் தேதி முதல் விண்ணப்பங் களை பதிவு செய்யலாம். பதிவு செய்ய இறுதி நாள் மே 19 ஆகும். மாணவர்கள் தரவரிசைப்பட்டியல் கல்லூரிக்கு மே 23 ஆம் தேதி அனுப்பப்படுகிறது.
மாற்றுத்திறனாளிகள், விளையாட்டு வீரர்கள், முன்னாள் ராணுவ வீரர்கள் உள்ளிட்ட சிறப்பு ஒதுக்கீட்டு மாணவர்களுக்கான கலந்தாய்வு மே 25 முதல் 29 வரை நடை பெற உள்ளது. முதல்கட்ட பொது கலந்தாய்வு மே 30 முதல் ஜூன் 9 ஆம் தேதி வரையிலும், இரண்டாம் கட்ட பொது கலந்தாய்வு ஜூன் 12 முதல் 20 வரையிலும் நடைபெற உள்ளது. முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் ஜூன் 22 அன்று தொடங்குகிறது.