districts

img

கடும் அவதிக்குள்ளாகும் பெரியார் நகர் மக்கள்

கரூர், செப்.15 - பெரியார் நகரில் உள்ள நுண்  உரக்கிடங்கால் பொதுமக்கள் பல்வேறு நோய்த் தொற்றுகளுக்கு  ஆளாகின்றனர். எனவே இந்த  உரக் கிடங்கை உடனே இடமாற்றம் செய்ய வேண்டுமென அப்பகுதி மக்கள், சிபிஎம் வலியுறுத்தி யுள்ளது. கரூர் மாவட்டம், குளித்தலை நக ராட்சிக்குட்பட்ட பெரியார் நகர்  பகுதியில் செயல்பட்டு வரும் நுண்  உரக்கிடங்கை இடமாற்றம் செய்ய வேண்டும் என பொதுமக்கள்,  குளித்தலை இளைஞர்கள் கூட்ட மைப்பு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உள்ளிட்ட அனைத்துக் கட்சி களின் சார்பில் குளித்தலை நக ராட்சி ஆணையரிடம் மனு அளிக்கப் பட்டது. அம்மனுவில், “உரக் கிடங்கால் பொதுமக்கள் மிகவும் அவதிக்கு உள்ளாகின்றனர். நக ராட்சி மன்ற தீர்மானத்தின்படி, உட னடியாக உரக் கிடங்கை இட மாற்றம் செய்து, பொதுமக்கள் ஆரோக்கியமாகவும், தூய்மை யான காற்றை சுவாசிக்க நடவ டிக்கை எடுக்க வேண்டும்” என்றனர். இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன், சமூக ஆர்வலர் சுந்தர்,  குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த  சூர்யா உள்ளிட்ட பலரும் மனு  அளித்துள்ளனர்.

ஜெயா மஹால் அவென்யு குடியிருப்பைச் சேர்ந்த சூர்யா கூறுகையில், “குடியிருப்புகளுக்கு நடுவே நுண் உரக்கிடங்கு செயல் படுவதால், இந்த பகுதி முழுவதும் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் மக்கள் வீட்டின் ஜன்னல், கதவு களைக்கூட திறந்து வைத்து இயற்கை காற்றை சுவாசிக்க முடி யாமல் அவதிப்படுகின்றனர். இது மட்டுமன்றி, வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் தினமும் சிரமத்தை அனுபவிக்கின்றனர். குறிப்பாக குழந்தைகள், முதி யோர்களுக்கு சுவாசப் பிரச்சனை,  நோய்த் தொற்று அதிகளவு ஏற்படு கிறது. வீட்டில் சமைத்து வைக்கும் உணவில் ஈக்கள், கொசுக்கள் அமர்வதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய்த் தாக்கத்திற்கு ஆளாக நேரிடுகிறது. இதனால் பொருளாதார ரீதியிலும் நாங்கள்  அதிகளவில் பாதிக்கப்படுகிறோம். எனவே குளித்தலை நகராட்சி நிர்வாகம் உடனடியாக இந்த நுண் உர கிடங்கை வேறு இடத் திற்கு மாற்றி, நாங்கள் ஆரோக்கிய மாக வாழ வழிசெய்ய வேண்டும்” என்றார்.

பூங்காவிற்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் உரக் கிடங்கு

சமூக ஆர்வலர் சுந்தர் கூறுகை யில், “குளித்தலை நகராட்சி சார்பில்  பெரியார் நகர், ஜெயா மஹால் அவென்யுவில் குடியிருப்புகளின் மத்தியில் நகராட்சி சார்பில் குழந் தைகள் பூங்கா அமைப்பதற்காக இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால் நகராட்சி நிர்வாகம் அப்பகுதியில் பூங்கா அமைக்க  நடவடிக்கை எடுக்காமல், பொது மக்களுக்கு இடையூறாகவும், சுகா தார சீர்கேட்டை உண்டாக்கும் வகையிலும் நுண் உரக் கிடங்கை திறந்து, அப்பகுதி மக்களின் வாழ்க்கையை நாசமாக்க செயல் படுகிறது. தினந்தோறும் அப்பகுதி மக்கள் துர்நாற்றம் தாங்க முடியா மல், பல்வேறு உடல் உபாதை களால் பாதிக்கப்பட்டு வருகின்ற னர். குளித்தலை நகராட்சி நிர்வா கம் பொதுமக்களின் ஆரோக்கியத் தில் அக்கறையின்றி செயல்பட்டு வருகிறது. குறிப்பாக குளித்தலையில் புதிய பேருந்து நிலையம் அமைக்க வில்லை. பொதுமக்களுக்கும், பய ணிகளுக்கும் சுகாதாரமான கழிப் பறைகள் இல்லை; குடிநீர் இல்லை.  குளித்தலை நகரத்தில் உள்ள சாக்கடை கால்வாய்கள் நகரம் முழு வதும் சுற்றி வருகிறது. நகரத்தை  விட்டு வெளியேற வழியில்லாத தால், சாக்கடை கழிவுநீர் ஆங்காங்கே தேங்கி கிடக்கிறது. தற்போது மாநிலம் முழுவதும் டெங்கு காய்ச்சல் அதிகளவில் பரவி வருகிறது. இந்நிலையில் கொசுவின் உற்பத்தி கூடாரமாக உள்ள இந்த நுண் உரக்கிடங்கை உடனடியாக நகராட்சி நிர்வாகம் அப்புறப்படுத்த வேண்டும்” என்றார்.

மக்களை வஞ்சிக்கும் நகராட்சி

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியச் செயலாளர் இரா.முத்துச் செல்வன் கூறுகையில், “குளித் தலை நகராட்சி, பெரியார் நகர், ஜெயா மஹால் அவென்யு குடியி ருப்பு பகுதியில் தூய்மை பாரத் திட்டத்தின்கீழ் நுண் உர செய லாக்க மையம் அமைக்கப்பட்டு கடந்த மூன்று ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது.  இந்த உர கிடங்கு மையத்தை இடமாற்றம் செய்ய வேண்டும் என்பது இப்பகுதி மக்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாகும், பலமுறை நகராட்சி நிர்வாகத்தி டம் கோரிக்கை மனு கொடுக்கப்பட் டும், பல கட்ட போராட்டங்கள் நடத்தி யதின் விளைவாகவும் 29.6.2022 அன்று நடைபெற்ற குளித்தலை நகராட்சி மன்ற கூட்டத்தில், இந்த உரக்கிடங்கை இடமாற்ற செய்ய தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஆனால், அந்த தீர்மானத்தை இன்று  வரை அமல்படுத்தாமல், கிடப்பில்  போட்டு நகராட்சி நிர்வாகம் மக்களை வஞ்சித்து வருகிறது.   பொதுமக்களின் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்காமல் அலட் சியமாக செயல்படும் குளித்தலை நகராட்சி நிர்வாகத்தை மார்க்சி ஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித் தலை ஒன்றிய குழு வன்மையாக கண்டிப்பதுடன், பொதுமக்களின் நியாயமான கோரிக்கையை உட னடியாக நிறைவேற்ற வேண்டும்.  உடனடியாக நுண் உரக்கி டங்கை வேறு இடத்திற்கு மாற்றி  அப்பகுதியில் சுகாதாரமான சூழ்நிலை நிலவும், பொதுமக்க ளின் ஆரோக்கியமான வாழ்க்கைக் கும் குளித்தலை நகராட்சி நிர்வாகம்  அரணாக நிற்க வேண்டும் என  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் குளித்தலை ஒன்றியக் குழு சார்பில்  கேட்டுக் கொள்கிறோம்” என்றார்.