districts

img

உரிய இழப்பீடு தராமல் நான்கு வழிச்சாலைக்காக இடிக்கப்பட்ட வீடு

மயிலாடுதுறை, ஆக.30 - மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம் பாடி வட்டம், தலைச்சங்காடு அருகே யுள்ள தலையுடையவர்கோவில்பத்து, கண்டியன் திடல் பகுதியில் நான்கு வழிச்சாலை பணிக்காக உரிய இழப்பீடு  வழங்காமல் அப்பாவி ஏழை குடும் பத்தை காவல்துறையை வைத்து விரட்டியடித்து அராஜகமான முறை யில் குடிசைகளை அகற்றிவிட்டனர். இதனால், கடந்த 7 நாட்களாக பாதிக் கப்பட்ட குடும்பத்தினர் சாலையில் வசிக்கும் அவலநிலை நீடிக்கிறது.  விழுப்புரம் முதல் நாகை வரையில் நான்கு வழிச்சாலை அமைக்கும் பணி  கடந்த சில வருடங்களாக தீவிரமாக  நடைபெற்று வருகிறது. சாலை பணி யால் வீடுகளை இழப்பவர்களுக்கு உரிய இழப்பீடும் மாற்று இடமும் முறை யாக பல இடங்களில் வழங்கப்படாம லேயே பணிகள் நடைபெறுகின்றன.  இந்நிலையில் தரங்கம்பாடி வட்டம்,  தலைச்சங்காடு அருகேயுள்ள தலை யுடையவர் கோவில்பத்து, கண்டியன் திடலில் வசித்த 9 குடியிருப்புகளுக்கு உரிய இழப்பீடும், மாற்று இடமும் வழங்காமல் நகாய் அதிகாரிகள் காவல் துறை துணையுடன் ஆக.23 அன்று வலுக்கட்டாயமாக அராஜகமான முறை யில் வீடுகளை இடித்தனர்.  இதனால் அதிர்ச்சியடைந்த மக்கள்  மார்க்சிஸ்ட் கட்சியின் செம்பனார்கோ வில் ஒன்றியச் செயலாளர் கே.பி.மார்க்ஸ் தலைமையில் போராடினர். போராடியவர்களை தாக்கி காவல்து றையினர் கைது செய்தனர். தொடர்ந்து  ஆக.24 அன்று, காவல்துறையினர் துணையோடு ஒட்டுமொத்த வீடுகளை யும் இடித்து தரைமட்டமாக்கினர்.  குறிப்பாக தலையுடையவர் கோவில்பத்து, கண்டியன் திடல் முனி யாண்டி மற்றும் அவரது மகன் குரு மூர்த்தி குடும்பத்தினர் வீட்டை இழந்து வாழ வழியின்றி கைக்குழந்தைகளோடு சாலையிலேயே  வசிக்கின்றனர். இரவு நேரத்தில் உறங்க இடமின்றி, உண வின்றி கடந்த ஒரு வாரமாக தவித்து வருகிற இவர்களுக்கு, உரிய இழப்பீ டும், மாற்று இடமும் வழங்க வேண்டு மென மாவட்ட ஆட்சியர், கோட்டாட்சியர், வட்டாட்சியரிடம் வலி யுறுத்தியும் எந்தவித நடவடிக்கை எடுக்கவில்லை. தற்போது இரவு நேரங்களில் மழை பெய்வதால் ஒதுங்கி நிற்கக்கூட வழி யில்லாமல், சொல்லொண்ணா துய ரத்தை அவர்கள் அனுபவிக்கின்றனர். எனவே, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி  சார்பில் போராட்டம் நடத்தப் போவதாக கட்சியின் செம்பனார்கோவில் ஒன்றியச்  செயலாளர் கே.பி.மார்க்ஸ் கூறியுள்ளார்.