districts

img

ஒரே நாளில் 6 முருகன் கோயில்கள் தரிசனம்: கும்பகோணத்திலிருந்து சிறப்பு பேருந்து இயக்கம்

அமைச்சர்கள் தொடங்கி வைத்தனர் கும்பகோணம், அக்.19 - தமிழ்நாடு முதலமைச்சர் உத்தர விற்கிணங்க, கும்பகோணம் அருகே  திருவிடைமருதூர் தாலுகா திருப்ப னந்தாள் அருணஜடேஸ்வரர் கோவில் முன்பு போக்குவரத்துத் துறை அமைச்சர் சிவசங்கர், உயர்கல்வித் துறை அமைச்சர் கோவி.செழியன் ஆகியோர் சிறப்பு சுற்றுலா பேருந்தை கொடியசைத்து துவக்கி வைத்தனர்.  இந்த பேருந்து, எண்கண் சுப்பிர மணிய சுவாமி கோவில், சிக்கல்  ஸ்ரீ சிங்காரவேலன் ஆலயம், பொரவச்சேரி கந்தசாமி கோவில், எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி  கோவில், ஏரகரம் ஆதி சுவாமிநாத சுவாமி கோவில், சுவாமிமலை சுவாமிநாதசுவாமி கோவில் ஆகிய  6 திருக்கோவில்களை ஒரே நாளில் தரிசிக்கும் வகையில் வார இறுதி  நாட்களான சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் இயக்கப்படுகிறது. இதன் துவக்க நிகழ்ச்சியில், திருப்பனந்தாள் காசி மடம் முத்துக் குமார தம்பிரான் சுவாமிகள், மாநி லங்களவை உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான கல்யாண சுந்தரம், மயிலாடுதுறை நாடாளு மன்ற உறுப்பினர் சுதா, மயிலாடு துறை முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், திருவை யாறு சட்டமன்ற உறுப்பினர் துரை.சந்திரசேகர், அரசு போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் பொன் முடி, திருப்பனந்தாள் ஒன்றிய  பெருந்தலைவர் தேவி ரவிச்சந்தி ரன், துணை பெருந்தலைவர் அண்ணாதுரை, திருவிடைமருதூர் ஒன்றிய பெருந்தலைவர் சுபா திரு நாவுக்கரசு உள்ளிட்ட ஏராளமா னோர் கலந்து கொண்டனர்.  ஒரே எண்களைக் கொண்ட பேருந்துகள் இல்லை  ஒரே எண் கொண்ட மூன்று பேருந்துகள் இயக்கப்படுகின்றன என்ற கேள்விக்கு, திருநெல்வேலி மாவட்டம் போக்குவரத்துக் கழகத் திற்குட்பட்ட, ஒரே பதிவு எண் கொண்ட மூன்று வெவ்வேறு வண் ணங்கள் கொண்ட, மூன்று பேருந்துகள் ஒரே எண்ணை கொண் டுள்ளதாக செய்தி பரப்பப்பட்டிருக் கிறது. அது உண்மை அல்ல. ஏற்கனவே புறநகர் பேருந்தாக இருந்தது. அதன் பிறகு அரசு அனு மதியும், ஆர்டிஓ அனுமதியும் பெற்று  நகரப் பேருந்தாக மாற்றி அமைக் கப்பட்டுள்ளது. எனவே ஒரே எண்  கொண்ட மூன்று அரசுப் பேருந்து கள் இல்லை என்று அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்தார்.