districts

மின்சாரம் பாய்ந்து 5 ஆடுகள் பலி

திருவாரூர், மே 10-  

     திருவாரூர் மாவட்டம் குடவாசல் வட்டம் ஆலத்தூ ரைச் சேர்ந்தவர் செந்தில் நாதன். இவர் அரசு வேலைக்கும், தனியார் நிறுவனங்களில் வேலைக்கு முயற்சி செய்து கிடைக்காததால் கொடி ஆடு வளர்ப்பில் ஈடுபட்டு இருந்  தார்.

    இந்நிலையில், செவ்வாய்க்கிழமை பெய்த கனமழை  மாரியம்மன் கோவில் அருகே விவசாய நிலங்களுக்கு மேல் செல்லும் மின் கம்பி அறுந்து விவசாய நிலத்தில் அறுந்து கிடந்துள்ளது. இதனை அறியாமல் அங்கு மேய்ச்ச லுக்கு ஓட்டி வந்த 30 ஆடுகளில் 5 ஆடுகள் மின்கம்பி யில் சிக்கி உயிரிழந்தன. இதன் மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும்.

    தமிழக அரசு இறந்து போன ஆடுகளுக்கு நிவாரணம்  வழங்க வேண்டும் என பாதிக்கப்பட்ட செந்தில் நாதன்  கோரிக்கை விடுத்துள்ளார்.