districts

ஏரியில் பெண் குளிப்பதை வீடியோ எடுத்த 3 பேர் கைது

அரியலூர், ஜூன் 10-

     அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள கல்லாத் தூரில் தண்டலை கிரா மம் உள்ளது. இங்குள்ள ஏரியில் பெண் ஒருவர்  குளித்துக் கொண்டிருந் தார்.  

    அப்போது ஏரிக்கு சென்ற மூன்று பேர் அருகில் உள்ள புதரில்  மறைந்து கொண்டு அந்தப் பெண் குளிப்பதை செல்போனில் வீடியோ எடுத்தனர். எதிர்பாராத விதமாக அந்த பெண் திரும்பி இவர்கள் வீடி யோ எடுப்பதை பார்த்து விட்டார். உடனே அந்த பெண் கூச்சலிட்டார் அவர்கள் மூன்று பேரும் தப்பி ஓடி விட்டனர்.  

    இதுகுறித்து அப் பெண் ஜெயங்கொண்டம் காவல் நிலையத்தில் புகார் அளித்த புகாரின் பே ரில், தண்டலை கிராமத் தைச் சேர்ந்த அஜித் குமார் (23), தினேஷ் (21), விமல் (19) ஆகியோரிட மிருந்த செல்போனை வாங்கி பரிசோதனை செய்தபோது அதில் பெண்  குளிப்பதை வீடியோ பதிவு செய்திருந்தது தெரியவந்தது. இதை யடுத்து 3 பேரையும் காவல் துறையினர் கைது செய்து  விசாரித்து வருகின்றனர்.