districts

img

கனிமவளங்களை அதிகபாரம் ஏற்றிய 14 வாகனங்கள் பறிமுதல்

களியக்காவிளை. ஜூன் 9

     குமரிமாவட்டத்தில் இருந்தும் வெளி மாவட்டங்க ளில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகள்  கனிம வளங்களை வாகனங்களில்  அதிக பாரம் ஏற்றி கேரளா விற்கு கடத்தி செல்வது தொடர் கதையாக நடந்து வரு கிறது. இந்த லாரிகள் இரவு பகலாக சாலையில் செல்வ தால் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்படுவதோடு தொடர் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. இதனால் தினசரி கனிமவளங்கள் கொண்டு செல்லப்படும் லாரிக ளால் காலை நேரத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்ல முடியாமலும் பணியாளர்கள் குறித்த நேரத்தில் வேலைக்கு செல்ல முடியாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.  

    சட்ட விரோதமாக பாறைகளை உடைத்து கடத்தப்படு வதை தடுத்து நிறுத்தப்பட வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்தநிலையில்  தனிப்பிரிவு  போலீசார்  குழித்துறை முதல் களியக்காவிளை வரை வாகன சோதனையில் ஈடு பட்டனர். அப்போது அந்தவழியாக வாகனங்களை நிறுத்தி சோதனை செய்த போது  வாகனங்களில் கனிம வளங்களை அதிக பாரம் ஏற்றி கேரளாவிற்கு கடத்தி  செல்வது தெரியவந்தது. இதை தொடர்ந்து14 வாகனங்களை பறிமுதல் செய்த தனிப்பிரிவு போலீசார் வாகனங்களை களியக்காவிளை காவல் நிலையத்தில் கொண்டு சென்றனர்.

   தொடர்ந்து குமரி மாவட்டத்தின் கனிம வளங்களை கொள்ளை அடிக்கும் கும்பல் மாவட்டத்தை அழிவின் விளிம்பில் கொண்டு சென்று இருக்கின்றன உடனடியாக தமிழக அரசு தலையிட்டு இதற்கு நிரந்தர தீர்வு காணும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.