districts

img

‘நாட்டைக் காப்போம்’ கலைப் பிரச்சாரப் பயணம்

பொன்னமராவதி, அக்.13 - ‘நாட்டை காப்போம்’ கூட்டமைப்பு சார்பாக கலைப் பிரச்சார பயண கூட்டம் புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பேருந்து நிலையம் எதிரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு சிபிஎம் ஒன்றியச் செயலாளர் பக்ருதீன் தலைமை வகித்தார். ஒன்றியக் குழு உறுப்பினர்கள் மற்றும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சியினர் பங்கேற்ற னர். இந்தியாவில் சமத்துவம், சமூக நீதி, சுதந்திரம், சகோதரத்துவம் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களை காப்போம் என்ற தலைப்பில், நாகர்கோவில் முரசு கலைக் குழு வினரின் நாடக வடிவிலான பிரச்சாரம் நடை பெற்றது.