districts

img

வயநாடு நிதிக்காக திண்டுக்கல்லில் மொய் விருந்து

வயநாடு மக்களுக்கு நிவாரணம் வழங்க திண்டுக்கல் முஜிப் பிரியாணி உரிமையாளர் முஜிபுர் ரகுமான் தமிழர்களின் பாரம்பரிய பண்பாட்டு நிகழ்வான மொய்விருந்து நடத்தி அழைப்பு விடுத்தார். இந்நிகழ்வில் திண்டுக்கல் நகர மக்கள் கலந்து கொண்டு இலையின் அடியில் நிவாரணத் தொகையை வைத்துச் சென்றனர். இதில் ரூ.3 லட்சம் வரையோலை, சிறு குழந்தைகள் தங்கள் சேமிப்புப் பணம் ரு.3900, ‘பண்ணிடுவோம்’ யூடியூப் சேனல் மூலம் ரூ.3,80,000 என திரண்ட ரூ.6,89,900-ஐ முஜிபுர் ரகுமான், முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கினார். நிதியைப் பெற்றுக்கொண்ட முதல்வர் பினராயி விஜயன் திண்டுக்கல் மக்களுக்கு தனது மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.