districts

காட்டு விலங்குகளால் அச்சம்: உயிர் பயத்தில் மக்கள்

சின்னாளபட்டி, ஏப்.5-  திண்டுக்கல் மாவட்டம் கன்னிவாடிப் பேருராட்சிக்குட்பட்ட முதலாவது வார்டு மக்கள் காட்டு விலங்குகள் மத்தியில் உயிர் பயத்தில் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.  இப்பிரச்சனை குறித்து சந்திரலேகா கூறு கையில், “கடந்த 30 வருடங்களுக்கு முன்பு  பிழைப்பு தேடி பல மாவட்டங்களிலிருந்து கன்னிவாடிக்கு வந்தோம் இங்கு சாலை யோரத்தில் குடிசை அமைத்து வாழ்ந்து வந்தோம். பத்து வருடங்களுக்கு முன்னால் நெடுஞ்சாலைத்துறையினர் எங்களை அங்கிருந்து வெளியேற்றி ஆறாவது வார்டில் உள்ள காட்டுக்குள் குடிசைப் போட்டு கொடுத்தார்கள் இங்கு எந்த அடிப்படை வசதியும் இல்லை.  யாராவது இறந்து போனால் மயா னத்திற்கு கொண்டு செல்ல நான்கு கிமீ போக வேண்டும். எங்கள் இடத்திற்கு பட்டா இல்லை. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு  யானை அருகிலுள்ள மலையில் இருந்து இறங்கி வந்து ஒரு வீட்டுக்குள் செல்ல முயற்சித்தது. காட்டுப்பன்றிகள், சிறுத்தை கள் நடமாட்டம் உள்ளது” என்றார். சந்திரலேகா என்பவர் கூறுகையில், “பாதை இல்லாததால் ஒரு குடும்பத்தையே பலி கொடுக்க வேண்டியதாயிற்று. மனை விக்கு வயிற்று வலி ஏற்பட்டு மருத்துவ மனையில் சேர்த்து விட்டு வருவதற்குள் அவரது கணவருக்கு உடல் நலம் திடீரென  மோசமாகி அவர் இறந்து விட்டார். பாதை இல்லாததால் வாகனப் போக்கு வரத்து இல்லை. அதனால் அவரும் இறந்து விட்டார் அவரது மகன் தனியாளாய் தவிக்கி றார்” என்றார். ஆறாம் வகுப்பு படிக்கும் குறிஞ்சியன் என்ற மாணவர் கூறுகையில், “கொரோனா தொற்றால் பள்ளிகள் மூடப்பட்டிருந்தது. தற்போது பள்ளி திறந்தும் செல்ல முடியா மல் அவதிப்பட்டு வருகிறோம் பள்ளிக்குச் செல்ல வேண்டுமென்றால் தண்ணீருக்குள் இறங்கித் தான் செல்லவேண்டும். புத்த கப்பை நனைந்து விடும் என்றார்”   இந்த நிலையில் இப்பகுதி மக்கள் செவ் வாயன்று காலை எட்டு மணி அளவில்  பேரூ ராட்சி அலுவலகத்தில் அமர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டனர்  செயல் அலுவலர் யுவ ராணி, தலைமை எழுத்தர் முத்துராமன் மற்றும் தலைவர் தனலெட்சுமி ஆகியோர் உடனடியாக பணி செய்ய ஆட்களை அனுப்பினர். இதையடுத்து மக்கள் கலைந்து சென்றனர். இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ரெட்டியார்சத்திரம் ஒன்றியச்  கே.எஸ்.சக்திவேல் கூறும்போது “கன்னி வாடிப் பேருராட்சிக்குட்பட்ட முதலாவது வார்டு மக்களுக்கு சமுதாயக்கூடம், அங்கன்வாடி, சுகாதார நிலையம், சாலை வசதி ஆகியவற்றை செய்து தரக் கூறி பலமுறை மாவட்ட ஆட்சியர் உட்பட பலரி டம் மனுக் கொடுத்தோம் எந்தப் பலனும் இல்லை,  இப்பகுதி மக்களுக்கு பேரூராட்சி நிர்வாகம்  தேவையான வசதிகளை செய்து தர வேண்டும்” என்றார்.