பென்னாகரம், மார்ச் 31- ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி வாலிபர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந் தார். தருமபுரி மாவட்டம், பழைய தருமபுரி பகுதியைச் சேர்ந்தவர் பழனி மகன் சுரேஷ் (20). பஞ்சர் கடையில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த மார்ச் 28 ஆம் தேதியன்று தனது நண்பர்கள் வெங்க டேசன், ராமச்சந்திரன் ஆகியோருடன் ஒகே னக்கலுக்கு சுற்றுலா வந்துள்ளார். ஒகேனக் கல்லில் பல்வேறு இடங்களை சுற்றிப் பார்த்த பின், அவர்கள் நாடார்கொட்டாய் காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந் தனர். அப்போது சுரேஷ் ஆற்றை கடந்து செல்ல முற்பட்டுள்ளார். அப்போது ஆழ மான பகுதிக்கு சென்றபோது தண்ணீரில் மூழ்கி பலியானார். இதுதொடர்பாக ஒகே னக்கல் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்குப்பதிவு செய்து சுரேசை தேடினர். இதன்பின், முதலைப் பண்ணை அருகே காவிரி ஆற்றில் சுரே ஷின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. இதை யடுத்து மீட்கப்பட்ட சுரேஷின் உடல் பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டது. இதுதொடர்பாக ஒகேனக்கல் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர்.