districts

img

2 யானைகள் அடுத்தடுத்து உயிரிழப்பு!

 தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே வெவ்வேறு இடங்களில் 2 யானைகள் உயிரிழந்துள்ளது. பெண் யானை ஆற்றில் சிக்கியும் மற்றோரு ஆண் யானை வனப்பகுதியிலும் இறந்துகிடந்துள்ளது. 
  தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே கோடுப்பட்டி சின்னாறு வனப்பகுதியில் 10 வயது பெண் யானை சின்னாறு ஆற்றில் தண்ணீர் குடிப்பதற்காக சென்ற போது ஆற்றில் சிக்கி யானை உயிரிழந்துள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு பென்னாகரம் வனத்துறையினர் வந்து யானையின் உடலை மீட்டனர். 
அதேபோன்று பென்னாகரம் வனப்பகுதியில் 8 வயது யானை உயிரிழந்துள்ளதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் யானையின் உடலை மீட்டனர் இரண்டு யானைகளின் இறப்பிற்கான காரணத்தை கண்டறிய பிரேத பரிசோதனைக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது