districts

பொய் வழக்கை திரும்பப் பெற்று சண்முகவேலை விடுதலை செய்க!  விவசாயத் தொழிலாளர்கள் வலியுறுத்தல்

 தஞ்சாவூர், மார்ச் 1- பொதுமக்கள் கோரிக்கைக்காக போராட்டம் நடத்தி கைது செய்யப்பட்டுள்ள தோழர் சண்முகவேலை உடனடி யாக விடுதலை செய்ய வேண்டும் என அகில இந்திய விவ சாயத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.  இதுகுறித்து சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர். வாசு, மாவட்டத் தலைவர் ஆர்.பிரதீப் ராஜ்குமார் ஆகி யோர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,  ‘‘தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டி முத்தரையர் தெருவில், தனியார் தொலை தொடர்பு நிறுவனத்தின் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது. இப்பகுதியில் தொலைத்தொடர்பு கோபுரம் அமைக்கப்பட்டால், பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படும் என இப்பகுதி மக்கள் பல்வேறு கட்டப் போராட்டங்களை நடத்தி வந்தனர்.  இந்நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பு அதே  பகுதியைச் சேர்ந்த ஊராட்சி மன்றத் தலைவர் உதய குமார், ஒன்றிய கவுன்சிலரின் கணவர் ஜனார்த்தனன், ஊராட்சி மன்ற உறுப்பினர் செந்தில், திமுக நிர்வாகி சுரேஷ், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்க ஒன்றியச் செயலாளர் சண்முகவேல் உள்ளிட்ட 30-க்கும்  மேற்பட்டோர் போராட்டம் நடத்தினர்.  இதையடுத்து அங்கு வந்த தமிழ் பல்கலைக்கழக காவல்துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கைது செய்தனர். அப்போது கைது செய்யப்பட்டவர்களை வேனில் ஏற்றிக் கொண்டுச் செல்ல முயலும் போது அவர்களை கைது செய்யக்கூடாது என பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.  வேனில் ஏற்றப்பட்ட சண்முகவேல் வேனுக்கு வெளியே தலையை நீட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி  முழக்கங்களை எழுப்பி உள்ளார். இதனால் ஆவேசம டைந்த காவல்துறையினர் மற்ற அனைவரையும் விடு தலை செய்து விட்டு சண்முகவேலை மட்டும் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.  ஜனநாயக உரிமைக்காக பொதுமக்கள் கோரிக்கைக்  காக போராடிய சண்முகவேல் மீது காவல்துறையினர் வன்மமாக நடந்து கொண்டுள்ளனர். இதில் சண்முக வேல் மீது பதியப்பட்டுள்ள பொய் வழக்கை திரும்பப் பெற்று அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்  டும்’’ என கூறப்பட்டுள்ளது.