districts

உதவித்தொகை உயர்த்தி வழங்கப்படுமா? மாற்றுத்திறனாளிகள் எதிர்பார்ப்பு

தஞ்சாவூர், ஜூன் 11-  தஞ்சை ஒன்றியம் வன  துர்கா நகரில் வெள்ளிக் கிழமை தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரி மைகளுக்கான சங்கத்தின் புதிய கிளைக் கூட்டம் வெங்க டேஸ்வரி தலைமையில் நடைபெற்றது.  சங்கத்தின் மாவட்டச் செயலாளர் பி.எம்.இளங் கோவன், ஒன்றியத் தலை வர் சிவப்பிரியா ஆகி யோர் கலந்து கொண்டனர்.  தலைவராக சுரேஷ், செயலா ளராக வெங்கடேஸ்வரி, பொருளாளராக மகேஸ்வரி  ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.  வனதுர்கா நகரில் உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த  படுக்கையாக இருக்கும் சித்ரா என்பவர் பல ஆண்டு களாக ஆயிரம் ரூபாய் மாதாந்திர உதவித்தொகை பெற்று வருகிறார். மிகவும் ஏழ்மையான நிலையில், குடிசை வீட்டில் 1,000 ரூபாய்  வாடகைக்கு குடியிருந்து வருகிறார்.  அவருடைய குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு மாதம் 2000 ரூபாய் வழங்க வேண் டும். அதேபோன்று மன வளர்ச்சி குன்றிய 75 சத வீதத்துக்கும் மேல் பாதிக்கப் பட்டுள்ள மாற்றுத் திறனாளி கள் மூன்று பேருக்கு 1,500 ரூபாய் மட்டுமே கிடைத்து வருகிறது.  அதேபோன்று மன வளர்ச்சி குன்றிய ஒரு பெண்ணுக்கு இரண்டு ஆண்டு காலமாக உதவித் தொகை  வரவில்லை. மிகவும்  சிரமமான சூழ்நிலையில், வனதுர்கா நகரில் இருக்கக் கூடிய மாற்றுத்திறனாளி களுக்கு முறையாக கிடைக்க வேண்டிய உதவித் தொகை கிடைப்பதற்கான ஏற்பாட்டினை தஞ்சை  மாவட்ட மாற்றுத்திறனாளி கள் அலுவலகம் செய்து கொடுக்க வேண்டும் என  கோரிக்கை வைக்கப்பட்டு உள்ளது.