districts

img

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை சார்பில், சிறுபான்மையினர் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை திட்டங்களின் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம், சிறுபான்மையினர் நலம் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தலைமையில் நடந்தது. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் முன்னிலை வகித்தனர். விழாவில் 162 பயனாளிகளுக்கு ரூ.15,07,945 லட்சம் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

;