districts

‘தேரோடும் பாதையில் கீழ்பாலம் அமைக்க அனுமதிக்கக் கூடாது’  

தஞ்சாவூர், ஜூலை 7-  தஞ்சாவூர் மாவட்டம் முடப்புளிக்காடு கிராமத்தார்கள் சார்பில், பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ்  பொய்யாமொழியிடம் நேரிலும், தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவருக்கு கடிதம் மூலமும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது: தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி நகர் முடப்புளிக்காடு கிராமத்தில் 500 ஆண்டுகளுக்கு மேலாக உள்ள நீலகண்டபிள்ளையார் ஆலயத்தில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன் ஒருபகுதியாக தேரோட்டம் நடைபெறுவது வழக்கம்.  இத்தேர் நிரந்தர நிறுத்துமிடம் மற்றும் தேரோடும் பாதை 100 ஆண்டுகளுக்கும் மேலாக பேராவூரணி-அறந்தாங்கி ரயில்வே பாதை அமைப்பதற்கு முன்பிருந்தே உள்ளது. ரயில்வே பாதையில் அமைந்துள்ள கேட் எண் : எல்.சி.120-ல்  இருந்து 10 மீட்டரில், தேர் நிறுத்துமிடமும், தேர்ப் பாதையும் அமைந்துள்ளது.  மேலும், பேராவூரணி நகரின் கனரக வாகனப் போக்கு வரத்திற்கு, சேது சாலைக்கு பாதையை தவிர்த்து நகருக்கு  வேறுஏதும் இல்லை. விழாக்காலங்கள், நகரில் நடைபெறும் முக்கிய கூட்டங்களின் போதும் மற்றும் மழைக்காலங்களி லும், அவசரகாலங்களில் தீயணைப்பு மற்றும் மீட்பு வாக னங்கள், ஆம்புலன்ஸ், பள்ளி-கல்லூரி பேருந்துகள் முதலி யவை செல்வதற்கு சேது சாலையை தவிர்த்து இது ஒன்றே மாற்றுப்பாதையாகும். எனவே, இந்த தார்ச்சாலையை மாற்றி சுரங்கப் பாதை அமைப்பதற்கு அனுமதி வழங்க வேண்டாம் என மனுவில் கூறப்பட்டுள்ளது.