districts

பதப்படுத்தப்பட்ட உணவு தயாரிக்க அரசு மானியம்: விண்ணப்பம் வரவேற்பு

தஞ்சாவூர், டிச.18 -  பிரதம மந்திரி உணவு  பதப்படுத்தும் குறு நிறுவ னங்களை முறைப்படுத்தும் திட்டத்தில், தமிழகத்தில் தொழில் வளத்தை பெருக்க,  ஒன்றிய அரசின் 60  விழுக்காடு நிதி பங்களிப்பு டன், மாநில அரசின் 40  விழுக்காடு பங்களிப்புடன்  இத்திட்டம் செயல்படுத்தப் படுகிறது. மரச்செக்கு எண்ணெய், அரிசி மாவு மற்றும் மிள காய் அரவை மில், பேக்கரி, இட்லி, தோசை மாவு மற்றும் பொடி, அப்பளம், ஊறுகாய், வடாகம், வத்தல் தயாரிப்பு, காரவகைகள் தயாரிப்பு,  சிறுதானிய உணவுகள், அரிசிப்பொரி, சோளப்பொரி தயாரிப்பு, வறுகடலை, சத்துமாவு, பால் பதப்படுத்துதல், உண் ணத்தக்க நிலையிலுள்ள பதப்படுத்தப்பட்ட உணவு வகைகள் தயாரித்தல் போன்ற தொழில்களை தொடங்க மானியம் அளிக்கப் படும். உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், உற்பத்தி யாளர் கூட்டுறவு சங்கங்கள், ஏற்கனவே உணவு பதப்படுத் தும் தொழிலில் ஈடுபட்டுள் ளோர், குறு நிறுவனங்கள், சுய உதவிக் குழுவினர், உணவு  பதப்படுத்தும் குறுந் தொழில் நிறுவனங்கள், ஒழுங்குபடுத்தும் திட்டத் தின் கீழ் புதிதாக தொழில்  தொடங்க ஆர்வம் உள் ளோர், ஏற்கனவே நடத்தப் பட்டு வரும் குறுந்தொழில் நிறுவனங்களை விரிவாக்க மற்றும் தொழில் நுட்பத்தை  மேம்படுத்தவும் இத்திட்டத் தின் கீழ் பயன்பெறலாம்.  திட்ட தொகையில் 10 விழுக்காடு முதலீட்டாளர் தங்களின் பங்களிப்பை செலுத்த வேண்டும். 90 விழுக்காடு வங்கிகளின் மூலம் கடனாக வழங்கப்ப டும். அரசு திட்ட மதிப்பில் 35  விழுக்காடு  மானியம், அதிக பட்சம் ரூ.10 லட்சம் வரை வழங்கப்படும். இத்திட்டத்தின் கீழ் பயன்பெற pmfmd.mofpi.gov.in என்ற இணை யதளத்தில் விண்ணப்ப த்தை பதிவு செய்யலாம். கூடுதல் விபரங்கள் மற்றும் விண்ணப்பிப்பதற்கான வழி காட்டுதல் பெற, “பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், நாஞ்சிக்கோட்டை சாலை, தஞ்சாவூர்” என்ற முகவரிக்கு தொடர்பு கொள் ளலாம் என தஞ்சை மாவட்ட  ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.