தஞ்சாவூர், டிச.24- தஞ்சாவூர் மாவட்டத்தில் வல்லம், திருக்கானூர்பட்டி, மருங்குளம், குருங்குளம் உள்ளிட்ட பகுதிகளில் செண்டிப்பூக்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இப்பகுதியில் பூக்கும் பூக்கள் அனைத்தும் தஞ்சா வூர் பூச்சந்தையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்நிலையில், தற் போது தஞ்சாவூர் மாவட்டத் தில் இரவு நேரங்களில் பனிப் பொழிவு அதிகமாக உள்ளதால், செண்டிப் பூக்கள் உள்ளிட்ட அனைத்து பூக்களும் கருகி வருகின்றன. பூக்கள் கருகு வதால் போதிய விலையும் கிடைப்பதில்லை. இந்நிலையில் திருக்கா னூர்பட்டியில் விவசாயி ஒருவர், தனது ஒன்றரை ஏக்கர் நிலத்தில் சாகுபடி செய்த செண்டிப்பூக்கள் பனி யால் கருகியதால், பூக்களையும், பூச்செடி களையும் டிராக்டரை கொண்டு உழுது வயலுக்கு உரமாக்கினார்.