districts

தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 385 வழக்குகளுக்கு தீர்வு

தஞ்சாவூர், மார்ச் 13 - தஞ்சை ஒருங்கிணைந்த நீதிமன்றம் மற்றும் மாவட்டங்களில் உள்ள கீழமை நீதிமன்றங்களில் நிலு வையில் உள்ள வழக்குகளை சமரசமாக பேசி தீர்வு  காண்பதற்கான, தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம்  சனிக்கிழமை நடைபெற்றது.  தஞ்சையில் மாவட்ட அமர்வு நீதிபதி பி.மதுசூத னன் தொடங்கி வைத்தார். மோட்டார் வாகன விபத்து வழக்குகளை சிறப்பு மாவட்ட நீதிபதி எஸ்.ஜெயசிங், நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எம்.முருகேசன், மூன்றா வது நீதித்துறை நடுவர் சி.பாரதி ஆகியோர் கொண்ட முதலாவது அமர்வு விசாரித்து ரூ.6.49 கோடிக்கு தீர்வு காணப்பட்டது. இரண்டாவது அமர்வில் உரிமையியல் வழக்குகள், காசோலை வழக்குகளுக்கு ரூ.1.43 கோ டிக்கு தீர்வு காணப்பட்டது. மூன்றாவது அமர்வில் குடும்ப  நல வழக்குகளுக்கு ரூ.15 லட்சம் அளவுக்கு தீர்வு காணப் பட்டது. முன் வழக்கு, வங்கி வாராக்கடன் வழக்கில் ரூ. 2.38 கோடிக்கு தீர்வு காணப்பட்டது.  இதேபோல் பட்டுக்கோட்டை வட்ட சட்டப் பணிகள் குழுவின் சார்பில், தேசிய மக்கள் நீதிமன்றம், மூன்றா வது மாவட்ட அமர்வு நீதிபதி எஸ்.சண்முகவேல் தலை மையில் சனிக்கிழமை நடைபெற்றது. சார்பு நீதிபதி ஏ. பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். இந்த மக்கள் நீதிமன்றத்தில் 1,067 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் 385 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2,41,95,550 தொகை பாதிக்கப் பட்ட பொதுமக்களுக்கு இழப்பீடாக வழங்க தீர்ப்பு அளிக்கப் பட்டது.  பாபநாசம் நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதி மன்றம் நடைபெற்றது. இதில் காசோலை வழக்குகள், ஜீவனாம்ச வழக்குகள், பணம் கொடுக்கல்-வாங்கல் தொ டர்பான வழக்குகள், வங்கி கடன் வழக்குகள், நிலத் தக ராறு வழக்குகள் உள்ளிட்ட 140 வழக்குகள் விசார ணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதன் முடிவில்  88 வழக்குகளில் ரூ.28,87,500-க்கு தீர்வு காணப்பட்டது.  இதற்கு பாபநாசம் வட்ட சட்டப் பணிகள் குழுவின் தலைவ ரும், மாவட்ட உரிமையியல் நீதிபதி மற்றும் குற்றவியல் நடுவருமான சிவகுமார் தலைமை வகித்தார். இதில் வழக் கறிஞர்கள், வழக்காடிகள், நீதிமன்ற ஊழியர்கள் கலந்து கொண்டனர்.  கும்பகோணம், ஒரத்தநாடு, திருவையாறு உள்ளிட்ட இடங்களில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் அமர்வு கள் உள்பட மொத்தம் 1,609 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு,  ரூ.10.46 கோடி அளவுக்கு இழப்பீடு மற்றும் தீர்வு தொகை  வழக்காடிகளுக்கு பெற்றுத் தரப்பட்டது.