districts

தீக்கதிர் எதிரொலி பழுதடைந்த மண்ணி ஆற்றுப் பாலத்திற்கு புதிய பாலம் அமைக்க பரிந்துரை

கும்பகோணம், ஜூன் 23- தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா பந்தலூர் அருகே கீழகாட்டூர் கிரா மத்தில் இருந்து புழுதிக்குடிக்கு செல்லும் வழியில் மண்ணி ஆற்றுப் பாலம் உள்ளது. கனரக வாகனங்கள் சென்று வரக் கூடிய இந்த  பாலத்தில் திடீரென்று ஒரு தூண் உள்வாங்கிய தால் பாலத்தில் விரிசல் ஏற்பட்டது. இதனால்  இருபுறமும் கனரக வாகனங்கள் செல்லக்  கூடாது என எச்சரிக்கை பலகை வைத்துள்ள னர். தற்போது பாலத்தின் வழியே இரு சக்கர  வாகனங்கள் மட்டும் செல்லக் கூடிய அளவில்  வழி இருப்பதால், பொதுமக்கள் மிகுந்த அவ திக்குள்ளாகி உள்ளனர். இந்த வழியில்  கிராம மக்கள் அவசரத்திற்கு மருத்துவ மனைக்குகூட செல்ல முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே புதிய பாலத்தை கட்டித் தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என  அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்திருந்த னர். இதுகுறித்து தீக்கதிர் நாளிதழில் செய்தி வெளியானது. இதனையடுத்து திருப்பனந்தாள் ஒன்றிய குழுத் தலைவி தேவி ரவிச்சந்திரன், வட்டார  வளர்ச்சி அலுவலர் சிவக்குமார், பொறியாளர்  ரவி ஆகியோர் உடைந்த பாலத்தை ஆய்வு செய்தனர். பின்னர் நபார்டு திட்டத்தில் ரூ.1 கோடியே 72 லட்சம் திட்ட மதிப்பீட்டில் புதிய பாலம் கட்ட பரிந்துரை செய்ய வேண்டும் என ஆட்சியருக்கு திட்ட மதிப்பீடு செய்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. தற்போது பாலத்தின் நீர்நிலை ஆய்வுப் பணிகளை அதிகாரிகள் மேற்கொண்டு வருவதாக ஒன்றிய குழு தலைவி தேவி ரவிச்சந்திரன் தெரிவித்தார்.