districts

img

தஞ்சாவூர் மார்க்கெட்டில் வியாபாரம் செய்ய திருநங்கைக்கு காய்கறி கடை வழங்கல்

தஞ்சாவூர் காமராஜர் மார்க்கெட்டில் கடையை ஏலம் எடுத்த திருநங்கை சத்யா கூறுகையில், “திருநங்கைகளுடைய வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக, நான் காய்கறி கடை எடுத்து நடத்த ஏலத்தில் பங்கேற்று அதற்கான தொகையை செலுத்தியிருந்தேன். தற்போது கடையை நடத்த எனக்கு சாவி வழங்கப்பட்டுள்ளது. நான் மற்ற வியாபாரிகளின் ஒத்துழைப்போடும், பொதுமக்களின் ஆதரவோடும் இந்த காய்கறி கடையை நடத்தி, திருநங்கைகளுக்கு முன் மாதிரியாக செயல்படுவேன்” என்றார்.

தஞ்சாவூர், டிச.20 -  தஞ்சாவூர் காமராஜர் மார்க்  கெட்டில் ஏலம் எடுத்த வியாபாரி களுக்கு அதற்கான சாவிகளை  மேயர் சண்.ராமநாதன் வழங்கி னார். இதில் தமிழகத்திலேயே முதன்முறையாக திருநங்கைக்கு காய்கறி வியாபாரம் செய்ய ஏலம் மூலம் கடை வழங்கப்பட்டுள்ளது. தஞ்சாவூர் அரண்மனை வளா கத்தில் காமராஜர் காய்கனி மார்க் கெட் கடந்த 60 ஆண்டுகளாக செயல்  பட்டு வருகிறது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தை 4.1 ஏக்  கர் பரப்பளவில் உள்ள இடத்தில், 87 பெரிய கடைகளும், 201 சிறிய கடைகளும் கட்டப்பட்டன. இது  தவிர வாகனங்கள் நிறுத்துமிடம், ஏடிஎம் மையம், கழிவறை வசதி களும் கட்டப்பட்டுள்ளன. இதை யடுத்து கடந்த நவ.22 ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொலி மூலம் தஞ்சாவூர் காமராஜர் காய்  கறி மார்க்கெட்டை திறந்து வைத் தார். இதைத் தொடர்ந்து கடைகள் ஏலம் விடப்பட்டன. திங்கள்கிழமை (டிச.19) மாலை மாநகராட்சி அலு வலகத்தில் ஏலம் எடுத்த கடை தாரர்களுக்குரிய சாவிகளை ஒப்ப டைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்  றன. இந்நிகழ்ச்சியில், முதலில் கடையை ஏலம் எடுத்த திருநங்கை  சத்யாவுக்கான சாவியை மேயர்  சண்.ராமநாதன் வழங்கினார். தொடர்ந்து மற்ற வியாபாரி களுக்கு கடைகளின் சாவிகள் வழங்கப்பட்டன. இதுகுறித்து மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் செய்தியாளர்களி டம் கூறுகையில், “தஞ்சாவூரில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கட்டப் பட்டுள்ள காமராஜர் காய்கறி மார்க்கெட்டின், கடைகள் ஏலம்  விடப்பட்டதன் மூலம் ஆண்டுக்கு  ரூ.3.50 கோடி வருவாய் மாநக ராட்சிக்கு கிடைக்கும். கட்டப்பட் டுள்ள அனைத்து கடைகளும் ஏலம் விடப்பட்டுள்ளன. இதில் திரு நங்கை சத்யா, காய்கறி வியாபா ரம் செய்ய கடை கேட்டு ஏலத்தில் கலந்து கொண்டார். அவருக்கும் கடை வழங்கப்பட்டுள்ளது. தமிழ கத்திலேயே முதன் முதலாக தஞ்சா வூர் மாநகராட்சி நிர்வாகம் திரு நங்கை ஒருவருக்கு காய்கறி கடை யை வழங்கியுள்ளது” என்றார். நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் க.சரவணக்குமார் மற் றும் மார்க்கெட் வியாபாரிகள் பலர் கலந்து கொண்டனர்.