தஞ்சாவூர், ஜன.7 - தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவல கக் கூட்டரங்கில், வேளாண் பொறியியல் துறையின் சார்பில், தனியார் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்வது குறித்து முத்தரப்பு கூட்டம், மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலை வர் பேசுகையில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு வாடகை நிர்ணயம் செய்து செயல்படுத்த வேண்டும் என்ற விவசாயிகளின் கோரிக்கை யினை ஏற்று முத்தரப்புக் கூட்டம் நடத்தப்பட்டது. இக்கூட்டத்தில், விவசாயிகள் மற்றும் தனியார் நெல் அறுவடை இயந்திரங்கள் உரிமையாளர்களின் கருத்துகளை கேட்ட றிந்ததன் அடிப்படையில், தனியார் நெல் அறு வடை இயந்திரங்களுக்கான வாடகை நிர்ண யம் செய்யப்பட்டுள்ளது. பெல்ட் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகை யாக ரூ.2,350 எனவும், டயர் டைப் தனியார் நெல் அறுவடை இயந்திரங்களுக்கு மணி ஒன்றுக்கு வாடகையாக ரூ.1,700 எனவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், அறுவடை இயந்திரங்களின் உரிமையா ளர்கள் தங்களுக்கு நிர்ணயம் செய்யப்பட்ட வாடகைத் தொகைக்கு மிகாமல் விவசாயி களிடமிருந்து வசூல் செய்து அறுவடை இயந்திரங்களை பணியில் ஈடுபடுத்தி விவசா யிகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டும். இயந்திரங்களுக்கு கூடுதல் வாடகை வசூல் செய்வது குறித்து புகார் தெரிவிக்க விரும்பும் விவசாயிகள் வருவாய் கோட்ட அலுவலர்கள், வட்டாட்சியர்கள், வேளாண் மைப் பொறியியல் துறை மற்றும் வேளாண் மைத் துறை அலுவலர்களிடம் புகார் தெரி விக்கலாம். மேலும் வேளாண்மைப் பொறியியல் துறை அறுவடை இயந்திரங்களுக்கு பெல்ட் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,630 எனவும், டயர் டைப் அறுவடை இயந்திரங்களுக்கான வாடகை ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,010 என வும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. வேளாண் மைப் பொறியியல் துறை அறுவடை இயந்தி ரங்களை பயன்படுத்தி விவசாயிகள் பயன் பெற வேண்டும் என்றார்.