தஞ்சாவூர், அக்.30 - பக்கவாதம் பாதிக்கப்பட்டு 4 மணி நேரத்துக்குள் மருத்துவமனையை அணுகி னால், பக்கவாதத்தைக் குணப்படுத்தலாம் என மருத்துவக்கல்லூரி முதல்வர் ஆர்.பாலாஜிநாதன் தெரிவித்தார். உலக பக்கவாத நாளையொட்டி தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவ மனையில் சனிக்கிழமை நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்த அவர் பின்னர் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது: “உலக அளவில் ஆண்டுதோறும் ஒரு லட்சம் பேருக்கு 119 முதல் 149 பேர் வரை பக்கவாதத்தால் பாதிக்கப்படுகின்றனர். இந்தப் பாதிப்புக்கு ஆளாகிறவர்களுக்கு கை, கால் செயலிழப்பு, பேச்சுத்தன்மை மாற்றம், கண் பார்வை பாதிப்பு, நடை தடு மாற்றம் போன்றவை ஏற்படலாம். பக்கவாதத்தின் அறிகுறிகளை தொடக்க நிலையிலேயே அறிந்து 4 மணி நேரத்துக்குள் தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை அணுகி னால், அதன் தன்மையையும், உயிரிழப்பை யும் தவிர்க்க முடியும். தாமதமாக வந்தால் பக்கவாத்தால், பாதிக்கப்பட்டவர்களை முடமாக்கிவிடும். பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படுபவர்களு க்கு உடனடியாக 15 நிமிடத்துக்குள் லைன் சிடி ஸ்கேன் எடுத்து, அதற்குரிய மருந்தும் செலுத்தப்படுகிறது. ஏறத்தாழ ரூ.40,000 மதிப்புள்ள மருந்து இங்கு இலவசமாக வழங்கப்படுகிறது. தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு மாதத்துக்கு 150 பேர் பக்கவாத மேல் சிகிச்சைக்காக வருகின்ற னர். நிகழாண்டு இதுவரை 25 நோயாளி கள் திராம்போலைஸிஸ் மூலம் பக்க வாதத்துக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு, பயன டைந்துள்ளனர். மேலும் தமிழக முதல்வரின் மருத்து வக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் பக்கவா தத்துக்கு மிகச் சிறந்த சிகிச்சை இலவசமாக அளிக்கப்படுகிறது” என்றார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கண்கா ணிப்பாளர் எஸ்.மருதுதுரை, துணை முதல்வர் என்.ஆறுமுகம், நிலைய மருத் துவ அலுவலர் ஏ.செல்வம், மூளை நரம்பி யல் துறைத் தலைவர் வி.ரவிக்குமார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.