districts

img

ஆதனூரில் இலவச வேலைவாய்ப்பு முகாம்

தஞ்சாவூர், மார்ச்.10- தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, ஆதனூர் கிராமத்தில், ஸ்ரீநிதி கேப்பிட்டல் பைனான்ஸ் கம்பெனி சார்பில் வேலைவாய்ப்பு நேர்காணல் முகாம் நடை பெற்றது.  பேராசிரியர் முனைவர் வேத.கரம்சந்த் காந்தி ஏற்பாட்டின் பேரில், ஆதனூர் கவுன்சிலர் காரல் மார்க்ஸ் தலைமையில், தஞ்சாவூர் ஸ்ரீநிதி கேப்பிட்டல் பைனான்ஸ் கம்பெனியின் மண்டல அலுவலர் மற்றும் தஞ்சை கிளை மேலாளர் ஆகியோர் நேர் காணல் முகாமை நடத்தினர்.  முகாமில், 8 பேர் கலந்துகொண்டு, அதில், மூன்று நபர்கள் பணிக்காக தேர்வு செய்யப்பட்டனர். தேர்வு செய்யப்பட்ட வர்களுக்கு பணி ஆணை தஞ்சாவூரில் உள்ள மண்டல அலுவலகத்தில் வழங்கப் பட்டது. முன்னதாக, முன்னாள் ராணுவ வீரர் அருள் சின்னப்பா வரவேற்றார். சமூக செயற்பாட்டாளர் தாமரைச்செல்வன் நன்றி கூறினார்.