தஞ்சாவூர், அக்.8- தஞ்சாவூர் மேம்பாலம் அருகே செயல்பட்டு வரும் பார்வையற்றோர் அரசு மேல் நிலைப் பள்ளியில் மேற்கொள்ளப் பட்டு வரும் மேம்பாட்டுப் பணிக் காக, அன்னை வராஹி அறக் கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்திற் கான காசோலையை, நிர்வாகி குருஜி வராஹி மைந்தன், சிங்கப் பூரைச் சேர்ந்த இந்திரயோகன் ஆகியோர் தஞ்சை மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் வழங்கி னர். பின்னர் ஆட்சியர் தெரிவிக்கையில், “தஞ்சை மேம்பாலம் அருகில் மாற்றுத்திற னாளிகள் நலத்துறை சார்பில், இயங்கி வரும் பார்வைத் திறன் குறைபாடு உடையவர் களுக்கான, அரசு மேல்நிலைப் பள்ளியில் 133 மாணவர்கள் படித்து வருகின்றனர். கூடுதல் வகுப்பறைகள் தேவை என பள்ளி தலைமை ஆசிரியை சோபியா மாதவி வைத்த கோரிக் கையை ஏற்று, தனியார் அறக்கட்டளை சார்பில் ரூ.27 லட்சத்திற்கான காசோலை வழங்கப்பட்டுள்ளது. இதைக் கொண்டு ‘நமக்கு நாமே’ திட்டத் தின் கீழ் மிக தரமான கட்டடம் கட்டப்பட்டு மாணவர்களின் வசதிக்காக 5 மாதத்திற்குள் ஒப்படைக்கப்படும். இதுபோன்ற நன்கொ டைகள் பள்ளி வளர்ச்சிக்கு பெரும் உதவி யாக இருக்கும்” என மாவட்ட ஆட்சியர் தெரி வித்தார். அப்போது பள்ளித் தலைமை ஆசிரியை சோபியா மாதவி மற்றும் ஆசிரியர்கள், அலு வலர்கள் உடனிருந்தனர்.