தஞ்சாவூர், ஜன.24 - தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு ஜன.24 முதல் பிப்.23 ஆம் தேதி வரை நடை பெறுகிறது. 2021- 2022 ஆம் ஆண்டிற் கான ஊராட்சி, நகராட்சி, தொடக்க, நடுநிலை மற்றும் அரசு, நகராட்சி, மாநகராட்சி. உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல், பதவி உயர்வு, பணி நிரவல் கலந்தாய்வு உரிய கொரோனா வழிகாட்டு நெறி முறைகளின்படி தஞ்சாவூர் பூக்காரத் தெரு புனித வள னார் பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஜனவரி 24 ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் பிப்ரவரி 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் பொருட்டு அரசு வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகளை பின்பற்றி கீழ்க்காணும் வகையில் கலந்தாய்வு மாறுதல் கோரி விண்ணப்பித்த பதவி உயர்வு முன்னுரிமைப் பட்டி யலில் உள்ள தஞ்சாவூர் மாவட்ட ஊராட்சி, நகராட்சி, தொடக்க, நடுநிலை மற்றும் அரசு நகராட்சி, மாநகராட்சி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந் தாய்வில் குறிப்பிட்ட நேரத் தில் கலந்து கொள்ள வேண்டும்.
ஜன.25 ஆம் தேதி (செவ் வாய்க்கிழமை) மநகராட்சி, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் பொது மாறுதல் மாவட்டம் விட்டு மாவட்டமும், ஜன.27 ஆம் தேதி முற்பகல் நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாறுதல் கலந்தாய்வும் நடக்கிறது. அன்று பிற்பகல் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, ஜன.28 ஆம் தேதி அரசு, நக ராட்சி மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் பதவி உயர்வு, ஜன.29 ஆம் தேதி முற்பகல் ஒன்றியத்திற் குள் பட்டதாரி ஆசிரியர்கள் பணி நிரவல் நடக்கிறது. இவ்வாறு பிப்ரவரி 23 ஆம் தேதி வரை கலந்தாய்வு நடக்கிறது. அறிவிக்கப்பட்ட நேரத்தில் பங்கேற்க ஆசிரி யர்கள் அறிவுறுத்தப்படு கின்றனர் என தஞ்சை முதன் மைக் கல்வி அலுவலர் சிவக்குமார் தெரிவித்துள்ளார்.