தஞ்சாவூரில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களை குறி வைத்து, மருந்தகங்களில் போதை மாத்திரைகள் விற்கப்படுகிறதா என போதை தடுப்பு பிரிவு காவல்துறையினர் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர்.
தமிழகத்தில் கஞ்சா, போதை பொருட்கள், போதை சாக்லெட் போன்றவை விற்பனை அதிகளவில் உள்ளதை தடுக்கும் வகையில், காவல்துறையினர் பல்வேறு ஆய்வுகளை நடத்தி, குற்றவாளிகளை பிடித்து வருகின்றனர்.
பள்ளி, கல்லூரி மாணவர்களை குறிவைத்து விற்கப்படும் போதை பொருட்கள், சாக்லெட், மாத்திரைகளின் விற்பனையையும், அதற்கு காரணமாக உள்ள குற்றவாளிகளை பிடிக்கவும் போதை பொருள் தடுப்புப் பிரிவினர் பல இடங்களில் அதிரடியாக சோதனை நடத்தி வருகின்றனர்.
அதன்படி, தஞ்சாவூர் மண்டல போதைப் பொருள் தடுப்புப் பிரிவு, துணை காவல் கண்காணிப்பாளர் பரத் சீனிவாசன், தஞ்சாவூர் சுகாதார ஆய்வாளர் விமல், ஆய்வாளர் ராஜேஷ், தலைமை காவலர் மகேஸ்வரி, காவலர் செந்தில் குமார் ஆகியோர், தஞ்சாவூரில் உள்ள சுமார் 10க்கும் மேற்பட்ட மெடிக்கல், கடைகளில் போதை மாத்திரை விற்கப்படுகிறதா என செவ்வாய்க்கிழமை ஆய்வு நடத்தினர்.