தஞ்சாவூர், ஜூன் 9- இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 ன்படி தனியார் பள்ளிகளில் எல்கேஜி வகுப்பில் சேர்வதற்கு தேர்வு செய்யப்பட்டு, பள்ளிக்கல்வித் துறையின் உத்தரவால் அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்து பேரா வூரணி அருகே செங்கமங்கலத்தில் புத னன்று சாலை மறியல் நடத்தப்போவ தாக செங்கமங்கலம், அம்மையாண்டி கிராம மக்கள் அறிவித்திருந்தனர். இதுகுறித்து வட்டாட்சியர் த.சுகுமார் தலைமையில் அமைதி பேச்சுவார்த்தை செவ்வாயன்று நடைபெற்றது. பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை சார்பில் பங்கேற்ற அதிகாரிகள், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 25 விழுக்காடு இடங்கள் வாய்ப்பு மறுக்கப்பட்ட மற்றும் நலிவடைந்த பிரிவினரின் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு செய்து மாணவர்களை தேர்ந்தெடுக்க, அந்த மாணவரின் இருப்பிடம் பள்ளி யிலிருந்து ஒரு கிலோ மீட்டர் சுற்றள வுக்குள் இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. எனவே, இந்தச் சட்டத்தை திருத்தும் வரை அதில் குறிப்பிட்டுள்ள விதிமுறை களை பின்பற்ற வேண்டும், இதுகுறித்து உயர் அதிகாரிகளின் உத்தரவு இல்லா மல் நடைமுறைப்படுத்த இயலாது, உயர் அதிகாரிகளை ஆலோசித்த பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். கிராம மக்கள் சார்பில், மாணவர் களை தேர்ந்தெடுக்கும் நடைமுறை யானது, கடந்த ஆண்டுகளில் செயல் பட்டு வந்தது போல் இந்த ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும், ஏனைய மாவட்டங்களில் பின்பற்றப்படுவதைப் போலவே தஞ்சை மாவட்டத்திலும் இதுவரை பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையே தொடர வேண்டும்.
மாணவர்களை தேர்ந்தெடுப்பதற்கு முன்பாக தகவல் தெரிவிக்காமல் செங்க மங்கலம், அம்மையாண்டி கிராமங்க ளில் 10 மாணவர்களை தேர்ந்தெடுத்து, புதிதாக காரணம் கூறி ரத்து செய்தது மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத் தும். எனவே மாணவர்களின் பாதிப்பை கணக்கில் கொண்டு இந்த ஆண்டு மட்டும் ஏற்கனவே பின்பற்றப்பட்டு வந்த நடைமுறையின்படி மாணவர்களை பள்ளியில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்தனர். இரு தரப்பினரின் வாதங்களையும் கேட்ட வட்டாட்சியர், இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி நலி வடைந்த பிரிவினரின் பிள்ளைகளுக்கு ஒதுக்கீடு செய்து மாணவர்களை தேர்ந்தெடுக்கும் முறையில் மாண வர்களின் இருப்பிடம் கட்டாயமாக ஒரு கிலோ மீட்டர் சுற்றளவுக்குள் இருக்க வேண்டும் என்ற விதி கட்டாயமாக் கப்பட்டு உள்ளதால், இது தொடர்பாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு இறுதி முடிவெடுக்கப் படும்’’ என தெரிவித்தார். இதையடுத்து சாலை மறியல் திரும்பப் பெறப்பட்டது. இதுகுறித்து ஊராட்சி மன்ற தலைவர்கள், அம்மை யாண்டி வி.முத்துராமலிங்கம், செங்க மங்கலம் ஆர்.செல்வம் ஆகியோர் கூறு கையில், நகரங்கள் தவிர்த்து பெரும்பாலான கிராமப்பகுதிகளில் தனியார் பள்ளிகள் ஊருக்கு ஒதுக்குப் புறமாக உள்ளது. பள்ளி அமைந்துள்ள இடங்களில் குடியிருப்புகளே இல்லாத நிலை உள்ளது. எனவே அரசு 1 கிமீ தூரத்திற்குள் மாணவர்களின் இருப்பி டம் இருக்க வேண்டுமென்ற உத்தரவை மறுபரிசீலனை, செய்து அருகில் உள்ள கிராமத்தை சேர்ந்த மாணவர்களை சேர்க்கலாம் என பள்ளிக்கல்வி துறை அமைச்சர் உத்தரவிட வேண்டும்’’ என்றனர்.