பட்டுக்கோட்டை, டிச.26- தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள பொன்னவராயன் கோட்டை யில், 22 ஏக்கர் பரப்பளவில் கடந்த 2011-ஆம் ஆண்டு, ரூ.8 கோடி மதிப்பில், சேமிப்பு கிடங்குகள், தேங்காயை மதிப்புக் கூட்டும் பொருளாக மாற்றுதல், கொப்பரையை தரம் பிரித்தல், ஏல அரங்கம், எண்ணெய் பிழி யும் ஆலை ஆகியவற்றை கொண்ட தென்னை வணிக வளாகம் அமைக்கப்பட்டது. ஆனால், இந்த வணிக வளாகம் திறக் கப்பட்ட நாள் முதல், செயல்பாட்டுக்கு வரா மல் போனதால், கட்டிடங்கள் சேதமாகியும், இயந்திரங்கள் வீணாகியும் போயின. இதனால், இந்தப் பகுதியில் உள்ள தென்னை விவசாயிகளின் நலனை பாது காக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட இந்த தென்னை வணிக வளாகம் பயன் பாட்டுக்கு வராமலேயே வீணாவதால் விவ சாயிகள் வேதனை அடைந்தனர். மேலும், இந்த தென்னை வணிக வளா கத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வர தமி ழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் மூலம் தொடர்ந்து வலி யுறுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த அக்டோபர் மாதம் முதல்கட்டமாக ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இந்த நிதியில் தென்னை வணிக வளாகத்தில் பழுதான கட்டிடங் களை சீரமைத்தல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வந்தனர். இதைத் தொடர்ந்து, தமிழக அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் டிசம்பர் 2 ஆம் தேதி, பட்டுக் கோட் டையில் உள்ள தென்னை வணிக வளா கத்தை மேம்படுத்தவும், 500 டன் சேமிப்புக் கிடங்கு போன்ற கட்டுமானங்களை மேற் கொள்ளவும் ரூ.2.75 கோடி ஒதுக்கீடு செய்து அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து வேளாண் விற்பனைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘‘பட்டுக் கோட்டை தென்னை வணிக வளாகத்தை விரைந்து செயல்பாட்டுக்கு கொண்டு வர மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, ஏற்கெனவே ரூ.5.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது கூடுதலாக ரூ.2.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப் பட்டுள்ளது. இந்த நிதி மூலம் தேவையான பணிகள் மேற்கொள்ளப்பட்டு தென்னை வணிக வளாகம் விரைவில் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்படும்’’ என்றனர்.