தஞ்சாவூர், ஏப்.3- தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணியில் இருந்து திருப்பதிக்கு விரைவு பேருந்து இயக்க வேண்டும், இரவு 8 மணிக்கு மேல் பேராவூரணி நகருக்குள் வந்து செல்லும் வகையில் வெளியூர் தொலைதூரப் பேருந்துகளை இயக்க வேண்டும்” என சட்டமன்றத் தில் பேராவூரணி எம்.எல்.ஏ என்.அசோக்குமார் கோரிக்கை விடுத்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை பேராவூரணி பேருந்து நிலையத்திலிருந்து திருப்பதி செல்லும் அரசு விரைவுப் பேருந்து சேவையை பேராவூரணி எம்.எல்.ஏ என்.அசோக்குமார் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் விரைவுப் போக்குவரத்துக் கழக திருச்சி கோட்ட மேலாளர் முருகேசன், கும்பகோ ணம் கிளை மேலாளர் சேகர், பேராவூரணி கிளை மேலாளர் மகாலிங்கம், திமுக மாவட்ட அவை தலை வர் சுப.சேகர் உட்பட பலர் கலந்து கொண்டனர். அதனைத் தொடர்ந்து வாரச்சந்தை அருகே பேராவூரணி தென்னை உழவர் உற்பத்தியாளர் நிறு வனம் சார்பில், உற்பத்தி செய்யப்படும் தென்னை நீரா பானம் விற்பனை மையத்தையும் தொடங்கி வைத்தார்.