districts

ஏப்.15 கிழக்கு கடற்கரை பகுதிகளில் மீன்பிடித் தடைக்காலம் தொடக்கம்

தஞ்சாவூர்/மயிலாடுதுறை, ஏப்.13 - தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்குபடுத்தும் சட்டம் 1983 இன் கீழ், தமிழகத்தில் கிழக்கு கடற்கரை பகுதியில் மீன் இனப்பெருக்க காலத்தை கருத்தில் கொண்டும் மீன் வளத்தை பாதுகாக்கும் நோக்குடனும், மீன்பிடி தடைக்காலம் ஆண்டுதோறும் கிழக்கு கடற்கரைப் பகுதியில் ஏப்ரல் 15  முதல் ஜூன் 14 வரை மொத்தம் 61 நாட்க ளுக்கு, பாரம்பரிய மீன்பிடிக் கலன்கள் நீங்க லாக விசைப்படகுகள் மற்றும் இழுவை படகு கள் கொண்டு கடலில் மீன் பிடிப்பதற்கு தடை  விதித்து அரசால் ஆணை வழங்கப்பட்டுள்ளது.  எனவே மேற்குறிப்பிட்ட 60 நாட்களுக்கு மீன் வளத்தை பாதுகாக்கும் பொருட்டு, தஞ்சாவூர் மாவட்ட மீன்பிடி விசைப்படகுகள் கடலில் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என  கேட்டுக் கொள்ளப்படுகிறது.  இவ்வறிவிப் பினை மீறி மீன்பிடிப்பில் ஈடுபடும் படகுகள்  மீது, தமிழ்நாடு கடல் மீன்பிடி ஒழுங்கு படுத்தும் சட்டத்தின் (1983) கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தஞ்சை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரி வித்துள்ளார். 

மயிலாடுதுறை 
மயிலாடுதுறை மாவட்டத்தில் ஏப்ரல் 15 முதல் ஜூன் 14 வரை கடலில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கடல் மீன்வளத்தை பாதுகாக்கும் நோக்கத்து டன் 61 நாட்களுக்கு மீன் பிடிப்பதை தடை செய்து அரசு ஆணை வெளியிடப்பட்டுள்ளது. தடை செய்யப்பட்ட 61 நாட்களுக்கும் மயி லாடுதுறை மாவட்ட மீனவர்கள், மீன்பிடி விசைப்படகுகள் மற்றும் இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்லக் கூடாது என தெரி வித்துள்ளார்.