districts

img

விவசாயம்: தென்னையில் போரானின் முக்கியத்துவம் வேளாண் துறை விளக்கம்

தஞ்சாவூர், மார்ச் 19-  தென்னையில் போரானின் முக்கியத்துவம் குறித்து, பட்டுக்  கோட்டை வேளாண்மை உதவி  இயக்குநர் எஸ்.மாலதி வெளி யிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறி யிருப்பதாவது. தஞ்சாவூர் மாவட்டம், பட் டுக்கோட்டை வட்டாரத்தில் சுமார் 9,100 ஹெக்டேரில் விவசாயிகள் தென்னை சாகுபடி செய்து வரு கிறார்கள். தென்னையின் வளர்ச் சிக்கும், நீடித்த மகசூல், மண் வளத்திற்கும் தழைச் சத்து, மணிச் சத்து, சாம்பல் சத்து போன்றவை  மிக முக்கியமான மூலப்பொருட்க ளாகும். கால்சியம், மக்னீசியம், கந்தகம், இரும்பு, போரான், கார்  பன், மாங்கனீசு போன்ற நுணு ணுட்டச் சத்துகள் தென்னையின் வளர்ச்சிக்கு அதிக பங்கு வகிக்கின்  றன. மேலும், கோடை காலங்களில் தென்னையில் போரான் சத்து மிக வும் குறைந்து காணப்படுகிறது.
தென்னையில் போரான் சத்தின் முக்கியத்துவம்; 
போரான் சத்து சர்க்கரை பொருட்  களை ஒரு இடத்தில் இருந்து மற்ற  இடங்களுக்கு எடுத்துச் செல்வ தற்கு பெரிதும் உதவுகிறது. தென்  னையின் சாறு ஓட்டத்திற்கும், தழைச்சத்து மற்றும் கார்போ ஹைட்ரேட்டுகள் தென்னையில் சேமிக்கப்படுவதற்கும், சுண் ணாம்புச்சத்து தென்னையில் கிடைக்கச் செய்யவும் போரான் சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.
போரான் சத்துக்குறைவால் ஏற்படும் அறிகுறிகள்
போரான் சத்துப் பற்றாக்குறை  அறிகுறி முதலில் இளம் குருத்து களில் தோன்றும். குட்டையான இளம் குருத்துகள் உருவாகும். தென்னை இலைகள் இயல்பைவிட சுருங்கியும், மஞ்சள் அல்லது ஆரஞ்சு கலந்த மஞ்சள் நிறத்திலும்  காணப்படும். தீவிரப் பற்றாக்குறை யின் போது புதிய இலைக் குருத்துக்  களின் நுனி கத்தி வடிவிலும் பழுப்பு நிற திரவம் சுரக்கும். இது கொக்கி இலை என்றும் அழைக்கப்படும். இலைக்காம்புகளின் அடிப்புறத் தில் புதிய இலைக்குருத்துகள் இல்  லாமல் இருக்கும். படிப்படியாக இலைகள் சிறுத்து சிற்றிலை போன்று தோற்றமளிக்கும். குருத்  தழுகல் நோய் போரான் குறை பாட்டினால் ஏற்படுகிறது. தீவிர நிலையில் பாலைகள் அழுகியும் நடுக்குருத்து மட்டுமே இருக்கும். இலைக்காம்புகளில் புதிய இலைக்குருத்துகள் இல்லா மல் கடைசியில் மரம் இறந்து விடும். வறட்சியினால் பெரும்பாலும் போரான் குறைபாடு உருவாகும். தீவிர நிலையில் இலைகள் வாடி யும், நுனி இலை வளர்ச்சி குன்றி யும் இலைகள் சுருங்கியும் இருக் கும். போரனின் அளவு குறையும் பொழுது செல்களின் வளர்ச்சி தடைப்படுகிறது. மகரந்தப் பொடி யின் குழல் வளர்ச்சி பாதிக்கப்பட்டு  பெண் பூக்களின் கருத்தரிப்பு பாதிக்கப்படுகின்றது.  தேங்காய் சிறுத்து காணப்படு வதோடு அவற்றின் சீரான கன மில்லாத பருப்பும், தேங்காய் வெடித்  தும், தரமில்லாத கொப்பரையும் உருவாகின்றன. குரும்பைகள் உதிர்வதும், ஒல்லிக்காய் உருவாகு தல், கோழிக் குஞ்சு போன்ற, சிறிய மற்றும் பெரிய தேங்காய்கள் போன்ற பற்றாக்குறை அறிகுறி கள் தேங்காய் குலையில் காணப்  படுவதும் போரான் பற்றாக்குறையி னால் காணப்படும் பொதுவான அறி குறிகளாகும்.
போரான் சத்துக்குறைப்பாட்டை கட்டுப்படுத்தும் முறைகள்
போரான் சத்துக் குறைப் பாட்டை கட்டுப்படுத்த மரத்திற்கு 50 கிராம் போராக்ஸ் (வெண்காரம்)  இரண்டு முறை தொடர்ந்து மூன்று  மாத இடைவெளியில் அளிப்பதால்  ஓலைகள் நன்றாக பிரிந்து வளர்ச்சி யடைகிறது அல்லது ஒரு வரு டத்திற்கு ஒரு மரத்திற்கு 200 கிராம் போராக்ஸ் கரைசலை செலுத்துவ தால் மரம் போரான் குறைப்பாட்டி லிருந்து சிறிது சிறிதாக நிவர்த்தி செய்யப்படுகிறது. மேலும் மண் ணில் போராக்ஸ் இடுவது மரத் திற்கு நீண்டகால பயனை அளிக் கும். தென்னை சாகுபடி செய்யும் அனைத்து விவசாயிகளும் போரான் சத்துக் குறைபாட்டினை நிவர்த்தி செய்ய அருகில் உள்ள பட்டுக்கோட்டை வேளாண்மை விரி வாக்க மையத்தை அணுகி 50  விழுக்காடு மானியத்தில் கிடைக் கும் போராக்ஸ் உரத்தைப் பயன்  படுத்த வேண்டும். என செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.