districts

திருச்சி விரைவு செய்திகள்

தஞ்சையில் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

தஞ்சாவூர், மே 24 -  தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் நகராட்சி, பேராவூரணி, பெருமகளூர் பேரூராட்சிகள் மற்றும் பாபநாசம், திருவையாறு, தஞ்சாவூர், ஒரத்தநாடு, திருவோணம், பட்டுக்கோட்டை, மதுக்கூர், பேராவூரணி மற்றும்  சேதுபாவாசத்திரம் ஒன்றியங்களுக்கு கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.  இந்நிலையில், ஒரத்தநாடு ஒன்றியம், புலவன்காடு மற்றும் பாளம்பு தூர் ஊராட்சிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சாலை மற்றும் பாலம் விரி வாக்கப் பணி நடைபெற்று வருகிறது. இதனால் சாலையின் நடுவில் வருகிற 814 மி.மி. விட்டம் உள்ள எம்.எஸ். குடிநீர் குழாயைத் துண்டித்து, சாலை ஓரத்தில் புதிய எம்.எஸ்.குழாய் பதித்து வெல்டிங் செய்து சிமெண்ட் கலவை அமைக்கும் பணி நடைபெறுகிறது.  இதன் காரணமாக மே 26 (வியாழன்) ஆம் தேதி வரை குடிநீர் நிறுத்தம் செய்யப்படும் என தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தஞ்சாவூர் திட்டக்கோட்டம் நிர்வாகப் பொறியாளர் எஸ்.பாஸ்கரன் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தின்கீழ் பயன்பெறும் நகராட்சி, பேரூராட்சி மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் மாற்று ஏற்பாடு செய்து கொள்ளுமாறு தஞ்சாவூர் மாவட்ட ஆட்சி யர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தியுள்ளார். 


கலைஞர் வேளாண்  வளர்ச்சித் திட்டம் துவக்கம்

கரூர், மே 24 - கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் சென்னை தலைமை செயலகத்தில் இருந்து காணொலி காட்சி வாயிலாக தொடங்கி வைத்தார். இத்திட்டம் வர லாற்றுச் சிறப்புமிக்க திட்டம் என முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா  வேல்முருகன் கூறினார்.    கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித்  திட்டத்தை தொடங்கி வைத்தயொட்டி கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றி யம், முள்ளிப்பாடி ஊராட்சிக்குட்பட்ட சேர்வைகாரன்பட்டி, முள்ளிப்பாடி உள்ளிட்ட 17 கிராமங்கள், குக்கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பயனடை வர். விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் மற்றும் உபகரணங்களை முள்ளிப்பாடி ஊராட்சி மன்ற தலைவர் நீலா வேல்முருகன் வழங்கினார். ஊராட்சி மன்ற துணை தலைவர் ராமநாதன், ஊராட்சி செயலர் கணேசன்  மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.


விவசாயிகளுக்கு  இடுபொருள் வழங்கும் விழா

தஞ்சாவூர், மே 24 -  தஞ்சாவூர் மாவட்டம் பேராவூரணி வட்டாரத்தில், கலைஞரின் அனைத்து  கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் இடுபொருள் வழங்கும் விழா திங்கள்கிழமை நடைபெற்றது. நடப்பாண்டிற்கு தேர்வு செய்யப்பட்ட ஒட்டங்காடு, அம்மையாண்டி, பெரியநாயகிபுரம், இடையாத்தி ஆகிய நான்கு பஞ்சாயத்துகளில் இடுபொ ருள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது. இதில், ஒட்டங்காடு மற்றும் சொக்கநாதபுரம் ஊராட்சிகளில் பேராவூரணி சட்டமன்ற உறுப்பினர் என்.அசோக்குமார் தலைமை வகித்து விவசாயிகளுக்கு இடுபொருட்கள் வழங்கிப் பேசினார்.  இடையாத்தியில் மாவட்ட கவுன்சிலர் மூர்த்தி, பெரியநாயகிபுரத்தில் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் ஆல்பர்ட்குணாநிதி, அம்மை யாண்டியில் ஊராட்சிமன்ற தலைவர் வை.முத்துராமலிங்கம் தலைமை யில் இடுபொருள் வழங்கும் துவக்க விழா நடத்தப்பட்டது. சேதுபாவாசத்திரம் ஒன்றியம் சொக்கநாதபுரம், குருவிக்கரம்பையில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பி னர் சுவாதி காமராஜ், ஊமத்தநாடு, மரக்காவலசை ஊராட்சியில் ஒன்றியப்  பெருந்தலைவர் மு.கி.முத்துமாணிக்கம் தலைமையிலும், இடுபொருள் வழங்கும் துவக்க விழா நடைபெற்றது.


மதுரை விமானநிலையத்தை சர்வதேச விமான நிலையமாக்கும் முயற்சிகள் தொடரும்  மதுரை மக்களவை உறுப்பினர் சு.வெங்கடேசன் பேட்டி

மதுரை, மே 24- மதுரை விமான நிலையம் 24 மணி நேரமும் இயங்கும்  வகையில் சர்வதேச விமான நிலையமாக மாற்றுவது  தொடர்பான நடவடிக்கைகள் குறித்து நாடாளுமன்றத்தில் மீண்டும் வலியுறுத்தப்படும் தேவை ஏற்படும் பட்சத்தில்  தென்மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் விமானத் துறை அமைச்சரை நேரில் சந்திப்பது என முடிவு செய்  யப்பட்டுள்ளது. மதுரை விமானநிலைய விமான நிலைய ஆலோச னைக்குழுக் கூட்டம் திங்களன்று ஆலோசனைக்குழுத் தலைவர் மாணிக்கம்தாகூர் எம்.பி தலைமையில் நடை பெற்றது. கூட்டத்தில் மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் கலந்துகொண்டனர் கூட்டத்தில் மதுரை விமான நிலைய விரிவாக்கப் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. விமான நிலைய  விரிவாக்கத்திற்காக நிலமெடுப்புப் பணிகள் 95 சத வீதம்நிறைவு பெற்றுள்ளது. நீர்நிலை இடங்கள் வகை மாற்  றம் குறித்து தமிழக அரசு உத்தரவுகளை வெளியிட வேண்டி யுள்ளது. இப்பணியை அரசு விரைவில் முடிக்க வேண்டும். விமான நிலைய விரிவாக்கத்தில் புதிதாக ஐந்து விமான நிறுத்துமிடங்கள், இரண்டு ஹெலிபேடுகள், ஒரு கூடுதல்  பயணிகள் பாதை அமைக்கப்பட உள்ளது. இதற்கேற்ப வாகன நிறுத்தம், பேருந்து வசதிகள் மேம்படுத்தப்படும்.  இந்தியாவில் உள்ள 34 விமான நிலையங்களில் தூய்மையான விமான நிலையங்களில் முதலிடத்தையும், பயணிகள் சேவைத்தர மதிப்பீட்டில் இந்திய விமான நிலை யங்களில் நான்காவது இடத்தையும் மதுரை விமான நிலை யம் பெற்றுள்ளது. இதற்கான அதிகாரிகள், ஊழியர்கள் பாராட்டப்பட்டனர் என செய்தியாளர்களிடம் மதுரை மக்க ளவை உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்தார், மாவட்ட ஆட்சியர் அனீஷ்சேகர், காவல்துறை அதிகாரி  தங்கதுரை, விமான நிலைய அதிகாரி பாபுராஜ், ஆலோச னைக்குழு உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்றனர்.


பாலியல் துன்புறுத்தல் வழக்கு 800 பக்க குற்றப்பத்திரிகை தாக்கல்

விருதுநகர், மே 24- விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவருக்கு தொடர்ந்து எட்டு மாதங்களாக பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக கடந்த மார்ச் மாதம் விருதுநகர் மேலத்தெரு வைச் சேர்ந்த ஹரிஹரன் (27), அவரது நண்பர்களாக ஜூனத் அகமது (27), ரோசல்பட்டியைச் சேர்ந்த பிரவீன் (26), பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு அறிமுகமான மாடசாமி (37),  ஆகியோரும், பள்ளி மாணவர்கள் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கில் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அதன்படி, இந்த  வழக்கு தொடர்பான சுமார் 806 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி காவல் துணை கண்காணிப்பாளர் வினோதினி திருவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் திங்களன்று தாக்கல் செய்தார்.


வலிமை சிமெண்ட் விற்பனை  அதிகரிப்பு: ஆய்வுக் கூட்டம்  

திருச்சிராப்பள்ளி, மே 24 - டான்சம் நிறுவனம், தமிழ்நாடு முழுவதும் உள்ள உயர் அலுவலர்களுடன் வலிமை சிமெண்ட் விற்பனையை அதிகரிப்பதற்கான ஆய்வுக் கூட்டம், திருச்சியில் டான்சம் மேலாண்மை இயக்குனர் காமராஜ் தலைமையில் திங்க ளன்று நடைபெற்றது‌.  தமிழ்நாடு அரசு சிமெண்ட் நிறுவனத்தின் வலிமை சிமெண்ட் சென்ற ஆண்டு நவம்பர் மாதம்  தமிழக முதல மைச்சரால் தொடங்கி வைக்கப்பட்டது. தற்போது வரை ஒரு  லட்சம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை நடை பெற்றுள்ளது. இனி ஒவ்வொரு மாதமும் ஐம்பதாயிரம் முதல் அறுபதாயிரம் மெட்ரிக் டன் வலிமை சிமெண்ட் விற்பனை  இலக்கு நிர்ணயம் செய்து, விற்பனை செய்வதற்கான பணி கள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என டான்சம் மேலாண்மை இயக்குநர் தெரிவித்தார். இக்கூட்டத்தில் அனைத்து உயர் அலுவலர்கள் மற்றும் அனைத்து மாவட்ட விற்பனை அலுவ லர்கள் கலந்து கொண்டனர்.


ஏரி, குளங்களில் மண் எடுக்க விண்ணப்பிக்கலாம்
தஞ்சாவூர், மே 24-   தஞ்சாவூர் மாவட்டத்தில் பொதுப் பணித்துறை மற்றும் ஊரக வளர்ச்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள ஏரிகள்  மற்றும் குளங்களில் உள்ள வண்டல் மண், சவுடு மண், களி மண் ஆகிய சிறு வகை கனிமங்களை விவசாயம் மற்றும் சொந்த பயன்பாட்டிற்கு இலவசமாக எடுத்துக் கொள்ள விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது என மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.  தஞ்சை வட்டத்தில் 3, திருவையாறு வட்டத்தில் 2,  ஒரத்தநாடு வட்டத்தில் 35, பூதலூர் வட்டத்தில் 3, பாபநாசம்  வட்டத்தில் 3, பட்டுக்கோட்டை வட்டத்தில் 79, பேராவூரணி வட்டத்தில் 61 என மொத்தம் 186 ஏரி-குளங்களில் வண்டல் மண், சவுடு மண், களிமண் போன்ற சிறு கனிமங்களை விவ சாய நிலங்களை மேம்படுத்துதல், வீட்டு உபயோகம் மற்றும்  மண்பாண்டம் செய்தல் போன்ற பயன்பாட்டிற்கு இலவச மாக பயன்படுத்திக் கொள்ளலாம்.
நிபந்தனை 
விண்ணப்பதாரரின் இருப்பிடம் அல்லது விவசாய நிலம்,  மண் எடுக்க விண்ணப்பிக்கும் ஏரிகள் மற்றும் குளங்கள் அமைந்துள்ள அல்லது அதனை சுற்றியுள்ள வருவாய் கிரா மத்தில் அமைந்திருக்க வேண்டும். விவசாய பயன்பாட்டிற்கு ஒரு ஏக்கர் பரப்பளவுள்ள நன்செய் நிலத்திற்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 75 கன மீட்டருக்கு மிகாமலும், புன்செய் நிலத்திற்கு 90 கன மீட்டருக்கு மிகாமலும் வண்டல்  மண் இலவசமாக எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்படும்.  பொதுமக்களின் சொந்த பயன்பாட்டிற்கு இரண்டு ஆண்டிற்கு ஒருமுறை 30 கன மீட்டருக்கு மிகாமல் இலவச மாக எடுத்து கொள்ள அனுமதி வழங்கப்படும். எனவே, விவசா யிகள், பொதுமக்கள் மற்றும் மண்பாண்டம் செய்வோர் தங்கள்  சொந்த உபயோகத்திற்கு வண்டல் மண், களிமண் போன்றவை  தேவைப்படுவோர் சம்பந்தப்பட்ட பகுதி வட்டாட்சியர் மூலம்  விண்ணப்பித்து மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று மண் எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.