districts

img

சேலத்தில் தீக்கதிர் நாளிதழின் சந்தா அளிக்கும் நிகழ்வு

சேலத்தில் தீக்கதிர் நாளிதழின் சந்தா அளிக்கும் நிகழ்வு, சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத்தில் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஆர்.வெங்கடபதி தலைமையில் நடைபெற்றது.  இதில், 129 சந்தாவிற்கான தொகையை முதற்கட்டமாக வழங்கப்பட்டது. இதில், மாவட்டச் செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் பி.ராமமூர்த்தி, ஐ.ஞானசௌந்தரி, எம்.குணசேகரன், மேற்கு மாநகரச் செயலாளர் எம்.கனகராஜ், வடக்கு மாநகரச் செயலாளர் என்.பிரவீன் குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.