districts

சேலம் பெரியார் பல்கலை. பதிவாளர் பணியிடை நீக்கம்

சேலம், பிப். 9 - சேலம் பெரியார் பல்கலைக்கழகப் பதி வாளர் தங்கவேலு-வை பணியிடை நீக்கம்  செய்யுமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பல்கலைக்கழகத்துக்கு கணிப்பொறி, இணைய உபகரணங்கள் வாங்குவதில் ஆகியவற்றில் தங்கவேலு நிதி முறை கேடு செய்ததாகவும் கணினி அறிவியல் துறைக்கு ஒதுக்கப்பட்ட நிதியில் கையாடல் செய்ததாகவும் குற்றச்சாட்டு சுமத்தப்பட் டது.

அதேபோல, அளவுக்கு அதிகமாக கணினிகள் வாங்கி, அதிலும் முறைகேட் டில் ஈடுபட்டுள்ளதாகப் புகார் எழுந்தது. ஆதி திராவிட இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தில் முறைகேடு, அவுட்சோர்சிங் பணிகளுக்கான ஆள் தேர்வில் மோசடி என பதிவாளர் தங்கவேலு மீது அடுக்கடுக்காகக் குற்றச்சாட்டுகள் குவிந்தன.

இவற்றை விசாரித்த தமிழக அரசு, குற்றச்சாட்டுகளில் பெரும்பாலானவை நிரூபணம் செய்யப்பட்டு உள்ளதாகத் தெரி வித்து, பதிவாளர் தங்கவேலுவைப் பணி யிடை நீக்கம் செய்ய பல்கலைக்கழகத் துணை வேந்தருக்கு உத்தரவிட்டுள்ளது. பதிவாளர் தங்கவேலு பிப்ரவரி 29 அன்று ஓய்வு பெறுவதாக இருந்தது குறிப்பிடத்தக்கது.