ஏற்காடு, ஜூலை 14- சேலம் மாவட்டம், ஏற் காடு அரசு உயர்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய பேரிடர் மீட்பு படையினர் பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு செயல்முறை விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி னர். ஏற்காட்டில் அரசு உயர்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், தங்களது பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டாலோ அல்லது கட்டிடங்கள் சேதமடைந்தாலோ அதில் இருந்து தாமாக தப்பிப்பது எப்படி என்று செயல்முறை விளக் கம் செய்து காண்பித்தனர். மேலும், இடிபட்ட கட்டிட இடிபாடுகளில் சிக்கி கொண்டவர் களை கட்டிட சுவற்றில் உடைப்பு ஏற்படுத்தி எவ்வாறு மீட்பது, கட்டிடத்தின் மேல் பகு தியில் சிக்கிக்கொண்ட பொதுமக்களை கம்பி மூலம் எவ்வாறு கீழே கொண்டுவருவது, அதன் பின்னர் காப்பாற்றியவர்களுக்கு மருத் துவ முதலுதவி கொடுப்பது குறித்து மாணவ-மாணவிகள், பொதுமக்களுக்கு தேசிய பேரிடர் மீட்பு படையினர் விழிப்புணர்வு ஏற்ப டுத்தும் வகையில் செயல் முறை விளக்கம் செய்து காண்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி னர்.