districts

img

கருப்பு பட்டை அணிந்து, கிராம நிர்வாக அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கங்களின்  கூட்டமைப்பு சார்பில், டிஜிட்டல் கிராப் சர்வே பணியை புறக்கணிக்க கருப்பு பேட்ச் அணிந்து மாவட்டத்தலைவர் பா.சிவகுமார்  தலைமையில் முத்துக்கடை பேருந்துநிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் சக்கரவர்த்தி, மாவட்ட பொருளாளர் கீதா, ராணிப்பேட்டை கோட்ட செயலாளர் கார்த்திகேயன், கிராம நிர்வாக அலுவலர்கள் முன்னேற்ற சங்கம் மாவட்ட பொறுப்பாளர்கள் கபிலன், சங்கரநாராயணன் உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.