கடலூர், நவ.21- நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனம் கேரளா மாநிலம் வயநாடு நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிடும் வகையில் ரூ 1 கோடி நிவாரண நிதியை வழங்கியுள்ளது. திருவனந்தபுரத்தில் என்எல்சி இந்தியா நிறுவன தலைவர் மற்றும் மேலாண் இயக்குநர் பிரசன்ன குமார் மோட்டு பள்ளி ரூ.1 கோடி நிவாரண நிதிக்கான காசோலையை கேரளா முதல்வர் பினராயி விஜயனிடம் வழங்கி னார். நிறுவன மின்துறை இயக்குநர் வெங்கடா சலம் மற்றும் தலைமை நிர்வாக அதி காரி ஆனந்த ராமானுஜம் ஆகியோர் உடனிருந்தனர்.