districts

குடிநீர் வழங்கல், கழிவுநீரகற்று வரி செலுத்த செப்.30 கடைசிநாள்

சென்னை, செப்.21- சென்னைப் பெருநகர் குடிநீர் வழங்கல் மற்றும் கழிவுநீரகற்று வாரி யத்திற்குச் செலுத்த வேண்டிய குடிநீர் மற்றும் கழிவுநீரகற்று வரி யினையும், குடிநீர் கட்ட ணங்களையும்  செப்டம்பர் 30-ம் தேதிக்குள் செலுத்திட வேண்டுமென சென்னை குடிநீர் வாரி யம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது தொடர்பாக வெளி யிடப்பட்டுள்ள அறிக்கை யில்: வரி செலுத்துவதற்கு ஏதுவாக அனைத்து பகுதி அலுவலகங்கள்/பணி மனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவ லகத்தில் இயங்கும் வசூல் மையங்கள் அனைத்து வேலை நாட்களிலும், சனிக்கிழ மைகளிலும் இயங்கும் என தெரிவித்துக்கொள்கிறது. மேலும், நுகர்வோர்  கள் தங்களது நிலு வைத் தொகையை இணைய தளம் வாயிலாக செலுத்து வதற்கு வசதி ஏற்படுத்தப் பட்டுள்ளது.  அதனடிப்படை யில், https://bnc.chennai metrowater.in/#/public/cus-login <https://bnc.chennai metrowater.in/G  என்ற வலைதளத்தைப் பயன்படுத்தி கிரெடிட் கார்டு (Credit Card), டெபிட் கார்டு (Debit Card) மற்றும் நெட் பேங்கிங் (Net ¡õanking) மூலமாகவும் செலுத்தலாம்.  மேலும், பகுதி அலுவலகங்கள் / பணிமனை அலுவலகங்கள் மற்றும் தலைமை அலுவல கத்தில் இயங்கும் வசூல் மையங்களில், காசோலை மற்றும் பணமாக வரி செலுத்தலாம். எனவே, நுகர்வோர்கள் 30.09.2022க்குள் வாரி யத்திற்குச் செலுத்த வேண்டிய வரிகள் மற்றும் கட்டணங்களை உடனடி யாக செலுத்தி மேல் வரி யினை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப் பட்டுள்ளது.

;