districts

img

குடிமனைப் பட்டா கேட்டு எழுச்சி போராட்டங்கள்

அனைத்து வகை அரசு புறம்போக்கு நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு நிலவகை மாற்றம் செய்து குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், சமய நிலங்களில் குடியிருப்போருக்கு, இந்து சமய அறநிலையத்துறை சட்டம் 34இன்படி குடிமனைப் பட்டா வழங்க வேண்டும், ரயில்வே காலி நிலங்களில் குடியிருக்கும் மக்களுக்கு குடியிருப்புகளை உறுதி செய்ய வேண்டும்,நீதிமன்ற உத்தரவு என்ற பெயரால் ஏழை மக்களை நகரத்தை விட்டு வெளியேற்றக் கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் வேலூர், கள்ளக்குறிச்சி, திரு வண்ணாமலை உள்ளிட்ட வடமாவட்டங்களில் மாவட்ட ஆட்சியரிடம், கோட்டாட் சியரிடம், வட்டாட்சியரிடம் மனு அளிக்கும் போராட்டம் வெள்ளியன்று (மே 6) நடைபெற்றது.

குடியிருக்கும் உரிமை அனைவருக்கும் தேவை: உ.வாசுகி 

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு மனு கொடுக்கும் போராட்டம் நடைபெற்றது. பின்னர் மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியத்திடம் மனு அளித்தனர். மனுக்களை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சி யர் அதிகாரிகளிடம் நட வடிக்கை எடுக்க வலி யுறுத்தினர். மாவட்டச் செயலாளர் கோ.மாதவன் தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநிலக் குழு உறுப்பினர் எஸ்.ஜி.ரமேஷ் பாபு, டி.ஆறுமுகம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய உ.வாசுகி, “குடியிருப்பதற்கு பணக் காரனுக்கு மட்டுமல்ல, ஏழை மக்களுக்கும் அந்த உரிமை வேண்டும்” என்றார். நீர்நிலை, புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் அனைவருக்கும் குடிசை மாற்று வாரியத்தின் மூலம் வீடு கட்டி கொடுக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் உறுதியளித்திருக்கிறது என்றும் கடலூர், பண்ருட்டி, சிதம்பரம் ஆகிய பகுதி களில் அனைவருக்கும் வீடு வழங்கவும் மாவட்ட நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் வாசுகி தெரிவித்தார். கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடைபெற்ற இயக்கத்தில் மாநிலக் குழு உறுப்பினர் பாண்டி, மாவட்டச் செயலாளர் ஜெயசங்கர், செயற்குழு உறுப்பினர்கள் ஆனந்தன், ஏழுமலை, அலமேலு, மாவட்டக் குழு உறுப்பினர் ஸ்டாலின் மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.டி.சங்கரி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். குடியாத்தம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி பலர் கலந்து கொண்டனர். ராணிப்பேட்டை மாவட்டம் கலவை வட்டாட்சியர் அலுவலகம் முன்பு நடை பெற்ற இயக்கத்தில் மாவட்ட அமைப்பாளர் என்.காசிநாதன்,

மாவட்ட அமைப்புக்குழு உறுப்பினர் ரகுபதி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாவட்ட செயற்குழு உறுப்பினர் சக்திவேல், மாவட்டக் குழு உறுப்பினர் இந்துமதி,  தாலுகா செயலாளர் எம்.காசி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்திற்கு மாவட்டச் செயலாளர் எம்.சிவக்குமார் தலைமை தாங்கினார். ஆரணியில் நடைபெற்ற இயக்கத்தில் மூத்தத் தோழர் எம்.வீரபத்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். செய்யாறு உள்ளிட்ட பல்வேறு பகுதியிலும் இயக்கம் நடைபெற்றது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், செயற்குழு உறுப்பினர்கள் பி.குமார், வி.ராதாகிருஷ்ணன், எஸ்.கீதா, எஸ்,முத்துக்குமரன், ஏ.சங்கரன், ஆர்.மூர்த்தி, எஸ்.வேல்மாறன். ஜி.ராஜேந்திரன், சே.அறி வழகன், ஆர்.டி.முருகன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் சார் ஆட்சியர் அலுவ லகம் முன்பு நடைபெற்ற இயக்கத்தில் மாவட்டச் செயலாளர் ஆர்.சேகர்,  மாநகர பொறுப்பாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதேபோல் அஞ்செட்டி, கிருஷ்ணகிரி, தேன்கனிக்கோட்டை, கெல மங்கலம், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை ஆகிய பகுதிகளிலும் இந்த இயக்கம் நடைபெற்றது. மாநிலக் குழு உறுப்பினர் பி.தில்லிபாபு, மாவட்டச் செயற்குழு உறுப்பினர்கள், வட்டார செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.